மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் தந்தைக்கு புல் மீல்ஸ்... எனக்கு ஒரு ஸ்பூன் சாதம் : சல்மான்கான் சொன்ன டயட் ரகசியம் |
சின்னத்திரை நடிகை ஸ்ரீநிதி சமீப காலங்களில் பல சர்ச்சையான பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தனது தோழியும் நடிகையுமான நக்ஷத்திரா குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், நக்ஷத்திரா பிரச்னையில் இருப்பது போலவும், அவளை இப்போதே மீட்காவிட்டால் சித்ராவுக்கு நடந்தது போல் தவறாக ஏதாவது நடந்துவிடும் என்றும் குண்டை தூக்கி போட்டார்.
இந்நிலையில், நடிகை நக்ஷத்திரா இந்த சம்பவம் தொடர்பில் வெளியிட்ட வீடியோவில், 'எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. நான் நன்றாக தான் இருக்கிறேன். ஸ்ரீநிதி பேசியதற்கு அன்றே நான் விளக்கம் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், அவள் பேசியது சோஷியல் மீடியாவில் இந்த அளவுக்கு வைரலாகும் என்று நினைக்கவில்லை. அவள் டிப்ரஷனில் ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறாள். சமீப காலங்களில் அவள் பதிவுகளை பார்த்தாலே அது உங்களுக்கு புரியும்.
ஸ்ரீநிதி பேசுவதை பெரிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள். என் மேல் உள்ள அன்பினால் பலரும் எனக்கு மெசேஜ் அனுப்பி விசாரிக்கிறீர்கள், கால் செய்து பேசுகிறீர்கள். ஆனால், ஸ்ரீநிதி சொல்லியது போல் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. உங்கள் அன்புக்கு மிக்க நன்றி' என்று கூறியுள்ளார். இவ்வாறாக கடந்த சில நாட்களாக இணையத்தை கலக்கி வந்த ஸ்ரீநிதி கிளப்பிய சர்ச்சைக்கு நக்ஷத்திரா முற்றுப்புள்ளி வைத்து முடித்துவிட்டார்.