சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

சின்னத்திரை நடிகை ஸ்ரீநிதி சமீப காலங்களில் பல சர்ச்சையான பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தனது தோழியும் நடிகையுமான நக்ஷத்திரா குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், நக்ஷத்திரா பிரச்னையில் இருப்பது போலவும், அவளை இப்போதே மீட்காவிட்டால் சித்ராவுக்கு நடந்தது போல் தவறாக ஏதாவது நடந்துவிடும் என்றும் குண்டை தூக்கி போட்டார்.
இந்நிலையில், நடிகை நக்ஷத்திரா இந்த சம்பவம் தொடர்பில் வெளியிட்ட வீடியோவில், 'எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. நான் நன்றாக தான் இருக்கிறேன். ஸ்ரீநிதி பேசியதற்கு அன்றே நான் விளக்கம் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், அவள் பேசியது சோஷியல் மீடியாவில் இந்த அளவுக்கு வைரலாகும் என்று நினைக்கவில்லை. அவள் டிப்ரஷனில் ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறாள். சமீப காலங்களில் அவள் பதிவுகளை பார்த்தாலே அது உங்களுக்கு புரியும்.
ஸ்ரீநிதி பேசுவதை பெரிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள். என் மேல் உள்ள அன்பினால் பலரும் எனக்கு மெசேஜ் அனுப்பி விசாரிக்கிறீர்கள், கால் செய்து பேசுகிறீர்கள். ஆனால், ஸ்ரீநிதி சொல்லியது போல் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. உங்கள் அன்புக்கு மிக்க நன்றி' என்று கூறியுள்ளார். இவ்வாறாக கடந்த சில நாட்களாக இணையத்தை கலக்கி வந்த ஸ்ரீநிதி கிளப்பிய சர்ச்சைக்கு நக்ஷத்திரா முற்றுப்புள்ளி வைத்து முடித்துவிட்டார்.




