ரஜினியின் 'ஜெயிலர்-2' படத்தில் இணைந்த ஹிந்தி நடிகை அபேக்ஷா போர்வல்! | 15 கிலோ எடை குறைத்த கிரேஸ் ஆண்டனி! | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் அமரன்! | சூர்யாவின் 'கருப்பு' படத்தின் கிளைமாக்ஸை மாற்றும் ஆர்.ஜே.பாலாஜி! | விக்னேஷ் சிவனை தொடர்ந்து ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலக்ட்ரிக் கார் வாங்கிய அட்லி! | 'பைசன் முதல் தி ஜூராசிக் வேர்ல்ட்' வரை..... இந்த வார ஓடிடி ரிலீஸ்..! | 'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு |

ஜீ தமிழ் சேனலில் யாரடி நீ மோகினி தொடரில் நடித்து பிரபலமான நடிகை நக்ஷத்திரா, திருமணத்திற்கு பிறகு சீரியலில் நடிக்காமல் இருந்தார். கடந்த வருடம் நக்ஷத்திராவுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், அவர் தற்போது மீண்டும் சீரியல் நடிக்க தொடங்கியுள்ளார். செவ்வந்தி தொடரில் திவ்யா ஸ்ரீதர், சிவான்யா ப்ரியங்கா உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.
இந்த தொடரில் வில்லி கதாபாத்திரம் திருந்திவிட்டது போல் கதையை நகர்த்தி வருகின்றனர். அதேசமயம் புதிய கதாபாத்திரத்தில் என்ட்ரி கொடுக்கும் நக்ஷத்திரா ஹீரோயினுடன் போட்டியிடும் ரோலில் அறிமுகமாகிறார். இதற்கான ப்ரோமோ அண்மையில் வெளியான நிலையில் நீண்ட நாட்கள் கழித்து சின்னத்திரையில் என்ட்ரி கொடுக்கும் நக்ஷத்திராவுக்கு ரசிகர்கள் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.




