புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
ஜீ தமிழ் சேனலில் யாரடி நீ மோகினி தொடரில் நடித்து பிரபலமான நடிகை நக்ஷத்திரா, திருமணத்திற்கு பிறகு சீரியலில் நடிக்காமல் இருந்தார். கடந்த வருடம் நக்ஷத்திராவுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், அவர் தற்போது மீண்டும் சீரியல் நடிக்க தொடங்கியுள்ளார். செவ்வந்தி தொடரில் திவ்யா ஸ்ரீதர், சிவான்யா ப்ரியங்கா உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.
இந்த தொடரில் வில்லி கதாபாத்திரம் திருந்திவிட்டது போல் கதையை நகர்த்தி வருகின்றனர். அதேசமயம் புதிய கதாபாத்திரத்தில் என்ட்ரி கொடுக்கும் நக்ஷத்திரா ஹீரோயினுடன் போட்டியிடும் ரோலில் அறிமுகமாகிறார். இதற்கான ப்ரோமோ அண்மையில் வெளியான நிலையில் நீண்ட நாட்கள் கழித்து சின்னத்திரையில் என்ட்ரி கொடுக்கும் நக்ஷத்திராவுக்கு ரசிகர்கள் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.