இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |
விஷால் நடிப்பில் சுந்தர் சி இயக்கிய 'மத கஜ ராஜா' படம் 12 ஆண்டுகளாக கிடப்பில் இருந்த நிலையில், பிரச்னைகள் எல்லாம் முடிந்து நேற்று (ஜன.,12) வெளியானது. படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு அளித்த நிலையில், இதேபோல், தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முடங்கி கிடக்கும் பல படங்களும் வெளிவர வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
அதில் முக்கியமாக, நடிகர் விக்ரம் நடிப்பில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ள 'துருவ நட்சத்திரம்' படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 2016ம் ஆண்டு துவங்கப்பட்ட இதன் படப்பிடிப்பு, நிதி பிரச்னை உள்ளிட்ட காரணங்களுக்காக பலமுறை தடைப்பட்டது. இருந்தாலும், தடைகளை தாண்டி, படப்பிடிப்பையும் நடத்தி முடித்தார் கவுதம் வாசுதேவ் மேனன். இதன் ரிலீஸ் தேதிகளை பலமுறை அறிவித்து பின்னர் வெளியிட முடியாமல் ஒத்திவைத்தனர். இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இதற்கிடையே மலையாளத்தில் நடிகர் மம்முட்டி தயாரித்து நடித்துள்ள 'டொமினிக் அண்ட் தி லேடிஸ் பர்ஸ்' என்ற திரைப்படத்தை கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார். இப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் துருவ நட்சத்திரம் படம் பற்றி கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கவுதம் வாசுதேவ் மேனன், ''துருவ நட்சத்திரம் திரைப்படம் வெளியாக சூழ்நிலையில் இருக்கும் போது யாரும் எனக்கு உதவவில்லை. யாரும் அதைப்பற்றி கண்டுக்கொள்ளவில்லை. ஒரு திரைப்படம் வெற்றிப்பெற்றால் அதை ஓ அப்படியா என கேட்பார்கள். அதற்கு யாரும் சந்தோஷம் அடைய மாட்டார்கள். தயாரிப்பாளர் தாணு, இயக்குனர் லிங்குசாமி ஆகிய இருவர் மட்டுமே எனக்கு கால் செய்து பேசினர். இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் இருக்கும் எதிர்ப்பார்ப்பு மற்றும் அவர்கள் காட்டும் அன்பு மட்டுமே என்னை தொடர்ந்து இயங்க வைத்துக் கொண்டு இருக்கிறது,'' எனக் கூறியுள்ளார்.