'சக்திமான்' ஆக ரன்வீர் சிங்: பசில் ஜோசப் உறுதி | கோவை தமிழ் பிடிக்கும்: கிர்த்தி ஷெட்டி | அஜித் படத்தை இயக்கும் அளவுக்கு நான் இன்னும் வளரவில்லை! சொல்கிறார் இயக்குனர் ஸ்ரீ கணேஷ் | 'ஜனநாயகன்' கடைசி படமா? இல்லையா? இன்னும் முடிவெடுக்காத விஜய்! | ஜூலை 4ம் தேதி திரைக்கு வரும் சூர்யா சேதுபதியின் 'பீனிக்ஸ் வீழான்' | பிரகாசமான எதிர்காலம்: விஜய் வெளியிட்ட அறிக்கை! | அருண்குமார் இயக்கத்தில் நடிக்க தயாராகும் கமல்ஹாசன்! அன்பறிவ் இயக்கும் படம் தள்ளிப் போகிறது! | போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது | சரிய வைத்த 'சிக்கந்தர்', காப்பாற்றிய 'குபேரா' | 'கூலி' முதல் சிங்கிள் அப்டேட்… இன்று மாலை 6 மணிக்கு… |
காமெடி கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து வந்த சூரி, வெற்றிமாறன் இயக்கிய 'விடுதலை' படத்தின் மூலம் கதையின் நாயகனாக உருவெடுத்தார். இவரது சினிமா வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய இப்படத்திற்கு பிறகு, கதையின் நாயகனாக அடுத்தடுத்து ஒப்பந்தமானார். சமீபத்தில் வெளியான 'விடுதலை 2' படத்திலும் இவரது கதாபாத்திரம் பேசப்பட்டது.
'விடுதலை 2' படம் வெளியாகி 25 நாட்கள் ஆன நிலையில் நடிகர் சூரி தனது 'எக்ஸ்' பக்கத்தில் நெகிழ்ச்சி பதிவை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ''விடுதலை 1, விடுதலை 2 ஆகிய திரைப்படங்கள் என் வாழ்க்கையில் மிகவும் மாற்றத்தை ஏற்படுத்திய படங்களாக எப்போதும் இருக்கும். குமரேசனாக நடிப்பது என் வாழ்க்கையில் என்றென்றும் ஒரு சிறப்பு மற்றும் வரையறுக்கும் பாத்திரமாக இருக்கும்.
வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட எனது தொலைநோக்கு இயக்குனர் வெற்றிமாறன் சார், எனது தயாரிப்பாளர் எல்ரெட் குமார் சார் மற்றும் இந்த மறக்க முடியாத பயணத்தை சாத்தியமாக்கிய எனது சக நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு ஒரு பெரிய நன்றி. அனைத்து உதவியாளர் மற்றும் இணை இயக்குநர்களுக்கும் ஒரு சிறப்பு பாராட்டு. உங்கள் கடின உழைப்பு, வழிகாட்டுதல் மற்றும் ஆதரவு இல்லாமல், இவ்வளவு சிறப்பு வாய்ந்த திட்டத்தில் நான் இந்த மைல்கல்லை எட்டியிருக்க மாட்டேன். உங்கள் உண்மையான அன்பு மற்றும் ஆதரவிற்காக அனைத்து ஊடகங்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்களுக்கும் என்றென்றும் நன்றி. நீங்கள் எனது மிகப்பெரிய பலம்,' எனப் பதிவிட்டுள்ளார்.