பவன் கல்யாண் படத்தில் நடிக்கும் அர்ஜுன் தாஸ் | வெற்றி பட இயக்குனர் உடன் கைகோர்த்த பஹத் பாசில் | சாதனை மேல் சாதனை படைக்கும் 2018 படம் | மலையாளத்தை புரிந்து நடிப்பது கஷ்டமாக இருக்கிறது ; ஐஸ்வர்யா ராஜேஷ் | மோகன்லால் படத்தால் தாமதமாகும் திலீப் பட வேலைகள் | கணவரின் நடனத்தில் 36,000 குறைகளை கண்டுபிடிக்கும் கத்ரீனா கைப் | ராமன் அல்ல கர்ணன் ; ஆதிபுருஷ் பிரபாஸை விமர்சித்த கஸ்தூரி | டிம்பிள் ஹயாதி மீதான வழக்கை ரத்து செய்ய கோர்ட் மறுப்பு | இளமைகால கவர்ச்சி படத்தை வெளியிட்ட ஜீனத் அமன் | லாந்தர்: விதார்த் நடிக்கும் சஸ்பென்ஸ் த்ரில்லர் |
விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு சீசன் 6-ல் கலந்து கொண்டு டைட்டில் பட்டம் ஜெயித்தவர் பாலா. சின்னத்திரையில் பல ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று வரும் இவர் குக் வித் கோமாளில் நிகழ்ச்சியில் ரசிகர்களை சிரிக்க வைக்கும் கோமாளிகளில் ஷிவாங்கிக்கு அடுத்தப்படியாக முக்கியமான இடத்தில் இருக்கிறார். திரையில் காமெடியானாக தோன்றினாலும், நிஜத்தில் மிகவுன் செண்டிமெண்ட்டான சமூகப்பணியை பாலா செய்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த விஜய் டெலிவிஷன் அவார்டு நிகழ்ச்சியில் பாலாவுக்கு பெஸ்ட் காமெடியன் விருது வழங்கப்பட்டது. அப்போது அவர் செய்து வரும் சமூகப்பணிகள் குறித்தும் முதல் முறையாக வெளியுலகுக்கு தெரிவிக்கப்பட்டது. பாலா, முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு பல உதவிகளை செய்து வருவதோடு, பல ஏழை மாணவர்களின் படிப்பிற்கும் உதவி செய்து வருகிறார். இந்த செய்தி தெரிவிக்கப்பட்டு அவருக்கு விருது வழங்கப்பட்டது. அப்போது விருதை பெற்றுக்கொண்ட பாலா, “நூறு பேருக்கு கல்வி கொடுக்காம நான் உயிர கொடுக்க மாட்டேன்... கடவுள்கிட்டயே சொல்றேன்!” என உணர்ச்சி ததும்ப பேசினார். இதை கேட்ட பிரபலங்கள் அவருக்கு எழுந்து நின்று கைதட்டி மரியாதை செலுத்தினர். தற்போது சமூக ஊடகங்களிலும் பாலாவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.