சிக்கந்தர் தோல்விக்கு காரணம் முருகதாஸா ? சல்மான் கானா ? ; ராஷ்மிகா பதில் | 'சர்வம் மாயா' இயக்குனரின் அடுத்த படத்திலும் இணையும் நிவின்பாலி | வந்தே மாதரம் பாடலை பாட ஏ.ஆர் ரஹ்மான் மறுத்தாரா ? சின்மயி பதில் | மோகன்லால் படத்தை இயக்கும் பஹத் பாசிலின் ஆஸ்தான இயக்குனர் | நடிகரை அறைந்தாரா பூஜா ஹெக்டே? தீயாக பரவும் செய்தி | ஏப்ரல் 30ல் திரைக்கு வரும் தனுஷின் 'கர'? | ஓடிடியில் ஹிந்தியில் மட்டுமே வெளியான 'பாகுபலி தி எபிக்' | 'பார்டர்-2' படத்துடன் வெளியாகும் துரந்தர் -2 படத்தின் டீசர்! | ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக குரல் கொடுத்த மெஹபூபா முப்தி! | மீண்டும் தெலுங்கு படத்தில் நடிக்கும் பிரிகிடா சகா! |

இந்திய சினிமாவின் அசைக்க முடியாத ஆளுமை பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். பாடகர், இசை அமைப்பாளர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகம் கொண்ட கலைஞர். இந்திய மொழிகள் அனைத்திலும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்த சமயத்தில் மரணம் அடைந்தார்.
சென்னையில் அவர் வசித்து வந்த தெருவுக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. அவரது மகன் அவருக்கு மணி மண்டபம் கட்டி உள்ளார். இந்த நிலையில் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு முழு உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நேற்று திறந்து வைத்தார்.
விழாவில் அரியானா முன்னாள் கவர்னர் பண்டாரு தத்தாத்ரேயா, தெலுங்கானா அமைச்சர் ஸ்ரீதர் பாபு, பா.ஜ., மாநில தலைவர் ராமச்சந்திரராவ் மற்றும் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மகன் எஸ்.பி.பி.சரண், சகோதரி எஸ்.பி.சைலஜா உள்ளிட்ட குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.




