பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை |

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. வருகிற ஏப்ரல் 10 ஆம் தேதி பிக்பாஸ் அல்டிமேட் இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. இதற்கிடையில் கடைசிவார எவிக்ஷனாக யார் வெளியேறுவார் என ரசிகர்கள் அனைவரும் திக் திக் நொடிகளை எதிர்பார்த்து காத்திருந்தனர். ஹவுட்ஸ்மேட்டுகள் பலரும் தாமரைக்கு எதிராக இருந்ததால் அவர் தான் வெளியேற்றப்படுவார் என கருத்துகள் பரவியது.
ஆனால், பிக்பாஸ் தாமரையை காப்பாற்றி, அபிராமியை எலிமினேட் செய்துவிட்டார். பினாலே வாரத்தின் எவிக்சன் டாஸ்கில் போட்டியாளர்கள் மீது நெருப்பு பொறி கொட்டப்படுகிறது. அப்போது போட்டியாளர்களை அதிலிருந்து காப்பாற்றும் சேவ்ட் என்ற எழுத்து பொறிக்கப்பட்ட பாதுகாப்பு வளையம் அனைத்து ஹவுஸ்மேட்டுகள் மீதும் விழுகிறது. அபிராமி மீது மட்டும் விழவில்லை. இதனை தொடர்ந்து பிக்பாஸ் அபிராமி எலிமினேட் செய்யப்படுவதாக அறிவிக்கிறார். அபிராமி தனது சக போட்டியாளர்களிடம் விடைபெற்றுக் கொண்டு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.




