'காந்தி டாக்ஸ்' முதல் 'வித் லவ்' வரை... இந்த வார ஓடிடி வெளியீடுகள்.. | வருங்கால கணவருக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும்! மீனாட்சி சவுத்ரி வெளியிட்ட தகவல் | வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: 'துரந்தர்- 2' படத்தின் டிரைலர் நாளை வெளியாகிறது | ஜான்வி கபூரின் பிறந்தநாளில் வெளியிடப்பட்ட பெத்தி பட போஸ்டர்! | யோகி பாபுவின் 'கெணத்த காணோம்' படத்தின் டிரைலர் வெளியானது! | ரஜினி, கமல் இணையும் படம்: லதா ரஜினிகாந்த் சொன்ன தகவல் | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் 'கார்மேனி செல்வம்' புதிய ரிலீஸ் தேதி | மீண்டும் சிரஞ்சீவி படத்திற்கு இசையமைக்கும் தமன்! | என் போட்டோவை மார்பிங் செய்கின்றனர்!: ரச்சிதா ஆதங்கம் | ரொமான்டிக் திரில்லர் கதையில் உருவாகும் 'ஆசை' |

விஜய் டிவியின் பாக்கியலெட்சுமி தொடரில் கோபியாக நடித்து கலக்கி வருபவர் நடிகர் சதீஷ் குமார். சமீபத்தில் நடந்து முடிந்த விஜய் டெலிவிஷன் விருது நிகழ்ச்சியில் சிறந்த வில்லனுக்கான விருதை தட்டிச் சென்றார். இந்த தொடரின் ஆரம்பத்திலிருந்தே சதீஷ் குமாரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்டு வருவதோடு, பாராட்டுகளையும் பெற்று வருகிறார். வில்லன் கதாபாத்திரம் என்றாலும் கூட ஒரு ஹீரோவுக்கு இணையாக தான் ரசிகர்கள் இவரை ரசித்து வருகின்றனர்.
இந்நிலையில், அவர் தனது பழைய புகைப்படத்துடன் நகைச்சுவையான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், 'ச்சே... ஹீரோன்னு நினைச்சோம். வில்லன் ஆக்கி விருது குடுத்துட்டாங்க. வில்லனுக்கு ரெண்டு ஹீரோயின். எந்த கதையில இப்படி வருது. அப்போ நான் நல்லவனா? கெட்டவனா?. இல்ல நீ வல்லவன்' என பதிவிட்டு அதை தனது கதாபாத்திரமான கோபியின் மைண்ட் வாய்ஸ் என குறிப்பிட்டுள்ளார். இதைபார்க்கும் ரசிகர்களோ 'உங்களுக்கு சிறந்த நடிகர்' பிரிவில் விருது வழங்கியிருக்க வேண்டும் எனவும் கருத்து தெரிவித்து பாராட்டி வருகின்றனர்.




