10 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் தெறி | கிராமத்து கெட்டப்பில் வெளியான ஐஸ்வர்யா ராஜேஷின் ‛ஓ சுகுமாரி' முதல் பார்வை | கவர்ச்சி நடனம் ஆடிய ரஜிஷா விஜயன் | ஜனவரி 22ல் மலையாள திரையுலகம் வேலை நிறுத்தம் | அமிதாப் பச்சனை பார்க்க ஷாப்பிங் மாலில் நடந்த தள்ளுமுள்ளுவில் கண்ணாடி உடைப்பு : ரசிகர்கள் காயம் | சஞ்சய் தத்தை உண்மையிலேயே ஏமாற்றியது லியோவா ? ராஜா சாப்பா ? | பொங்கல் வெளியீட்டில் குதித்த ‛வா வாத்தியார்' | பொங்கலுக்கு மேலும் சில படங்கள் ரிலீஸ் | தமிழில் தடுமாற்றத்தில் 'தி ராஜா சாப்' | 'பராசக்தி'யில் இருக்கும் 'புறநானூறு'.... |

விஜய் டிவியின் பாக்கியலெட்சுமி தொடரில் கோபியாக நடித்து கலக்கி வருபவர் நடிகர் சதீஷ் குமார். சமீபத்தில் நடந்து முடிந்த விஜய் டெலிவிஷன் விருது நிகழ்ச்சியில் சிறந்த வில்லனுக்கான விருதை தட்டிச் சென்றார். இந்த தொடரின் ஆரம்பத்திலிருந்தே சதீஷ் குமாரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்டு வருவதோடு, பாராட்டுகளையும் பெற்று வருகிறார். வில்லன் கதாபாத்திரம் என்றாலும் கூட ஒரு ஹீரோவுக்கு இணையாக தான் ரசிகர்கள் இவரை ரசித்து வருகின்றனர்.
இந்நிலையில், அவர் தனது பழைய புகைப்படத்துடன் நகைச்சுவையான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், 'ச்சே... ஹீரோன்னு நினைச்சோம். வில்லன் ஆக்கி விருது குடுத்துட்டாங்க. வில்லனுக்கு ரெண்டு ஹீரோயின். எந்த கதையில இப்படி வருது. அப்போ நான் நல்லவனா? கெட்டவனா?. இல்ல நீ வல்லவன்' என பதிவிட்டு அதை தனது கதாபாத்திரமான கோபியின் மைண்ட் வாய்ஸ் என குறிப்பிட்டுள்ளார். இதைபார்க்கும் ரசிகர்களோ 'உங்களுக்கு சிறந்த நடிகர்' பிரிவில் விருது வழங்கியிருக்க வேண்டும் எனவும் கருத்து தெரிவித்து பாராட்டி வருகின்றனர்.