26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு |

விஜய் டிவியின் முன்னணி தொகுப்பாளர்களில் ஒருவர் பிரியங்கா தேஷ்பாண்டே. சூப்பர் சிங்கர், ஜூனியர் சூப்பர் சிங்கர், காமெடி ராஜா கலக்கல் ராணி, ஸ்டார் மியூசிக் உள்ளிட்ட பல ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த விஜய் டெலிவிஷன் விருது நிகழ்வில் பிரியங்காவிற்கு சிறந்த தொகுப்பாளர் 2022 ஆம் ஆண்டிற்கான விருது வழங்கப்பட்டுள்ளது. இதைப்பார்த்து கடுப்பான நெட்டிசன்கள், ப்ரியங்கா பிக்பாஸ் சீசன் 5 முடிந்து பல மாதங்களாக விஜய் டிவியில் பெரிய அளவில் எந்த நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கவில்லை. அப்படியிருக்க அவருக்கு ஏன் இந்த ஆண்டிற்கான விருது வழங்கப்பட்டது என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
டிடிக்கு அடுத்தப்படியாக பெண் தொகுப்பாளர்களில் கணிசமான ரசிகர்களை பெற்றுள்ள பிரியங்கா தேஷ்பாண்டே 2016 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து மூன்று முறை விஜய் டெலிவிஷன் விருதை சிறந்த பெண் தொகுப்பாளர் பிரிவில் வாங்கியுள்ளார்.




