ரேஸில் கார் பழுது : அஜித்தின் பாசிட்டிவ் ரிப்ளே...! | 48 மணிநேரம் தூக்கமில்லை : ஷாலினி பாண்டே | 16 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடை செய்ய வேண்டும் : சோனு சூட் | ஆளுமை உரிமை கேட்டு பவன் கல்யாண் வழக்கு | விவாகரத்து வதந்தி : கடும் கோபத்தை வெளிப்படுத்திய அபிஷேக் பச்சன் | சூர்யாவின் கருப்பு ரிலீஸ் மீண்டும் தள்ளிப் போகிறதா? | ரெட்ட தல படத்தின் டார்க் தீம் பாடல் வெளியானது | சோசியல் மீடியாவில் போட்ட பதிவால் ட்ரோலில் சிக்கிய தமன் | இந்த வார ரிலீஸ் : தியேட்டர்களைக் காப்பாற்றும் 'படையப்பா' | பிறந்தநாள் வாழ்த்து கூறியவர்களுக்கு ரஜினிகாந்த் நன்றி |

தெலுங்கில் ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கும் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் பிரியங்கா சோப்ரா. இதன் படப்பிடிப்பிற்காக அவ்வப்போது ஐதராபாத் வந்து செல்கிறார். அப்படி வந்து செல்லும்போதெல்லாம் ஐதராபாத்தில் பல பகுதிகளில் வீடியோக்களை எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.
சமீபத்தில் மகேஷ்பாபு, ராஜமவுலி, வில்லனாக நடிக்கும் நடிகர் பிரித்விராஜ் ஆகியோருக்கு இடையே எக்ஸ் பக்கத்தில் நடந்த சுவாரசியமான உரையாடலில் மகேஷ்பாபு ராஜமவுலியிடம், “நீங்கள் எப்போது சார் மகாபாரதத்தை ஆரம்பிக்க போகிறீர்கள் ? ஏற்கனவே நம்முடைய தெலுங்கு பெண் ஒருவர் (பிரியங்கா சோப்ரா) கடந்த ஜனவரியில் இருந்து இதற்காகவே ஐதராபாத் வீதிகள் ஒன்று விடாமல் சுற்றிக் கொண்டிருக்கிறார்” என்று பிரியங்கா சோப்ராவை குறிப்பிட்டு கிண்டல் அடித்திருந்தார்.
அதற்கு தற்போது கிண்டலாக பதில் சொல்லும் விதமாக விடியற்காலையில் ஐதராபாத் தெருக்களில் தான் எடுத்த சில புகைப்படங்களை மகேஷ்பாபுவின் பெயரை குறிப்பிட்டு பகிர்ந்து கொண்டுள்ளார் பிரியங்கா சோப்ரா. அது மட்டுமல்ல, “ஹலோ ஹீரோ நீங்கள் படப்பிடிப்பு தளத்தில் என்னிடம் சொன்ன கதைகளை எல்லாம் வெளியில் நான் லீக் பண்ண வேண்டும் என விரும்புகிறீர்களா?” என்றும் கிண்டலாக கேட்டுள்ளார்.