ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அடுத்த வாரம் அல்டிமேட் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது. அதற்குள் போட்டியாளர்கள் யாராவது ஒருவர், பணத்துடன் வெளியேறும் பணப்பெட்டி டாஸ்க் நடைபெற்றது. பணப்பெட்டியின் ஆரம்ப தொகை 3 லட்சமாக இருந்த போது நிரூப் அதை எடுத்துக் கொண்டு வெளியேறியதாக செய்திகள் வெளியானது. ஆனால், அது உண்மையல்ல. 6, 7, 8 லட்சம் என படிப்படியாக உயர்ந்த போது ஜூலி மட்டுமே லேசாக ஜெர்க் கொடுத்தார். எனவே, அவர் தான் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியே செல்வார் என அனைவரும் எதிர்பார்த்தனர்.
தாமரையின் குடும்ப சூழலை வைத்து அவர் பணப்பெட்டியை எடுத்துக்கொள்ளலாம் எனவும் மக்கள் பரிந்துரை செய்து வந்தனர். இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஸ்ருதி பெரியசாமி பணப்பெட்டியுடன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். 15 லட்சம் பணப்பெட்டி உடன் வெளியேற ஸ்ருதி, ஜூலி முயன்றனர். இவர்களுக்கு சில டாஸ்கள் வைக்கப்பட்டன. இதில் ஸ்ருதி வெற்றி பெற்று 15 லட்சம் பணத்துடன் ஸ்ருதி வெளியேறினார். இதுவரை டப் கொடுத்து விளையாடிய ஸ்ருதிக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.