ரீ-ரிலீஸாகும் ‛தேவர் மகன்' பட பணிகள் : சிறுவன் பேசிய ‛கட்டபொம்மன்' வசனத்தால் அசந்து போன கமல் | பிரபாஸின் 'ஸ்பிரிட்' படப்பிடிப்பு மேலும் 4 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது! | இளையராஜாவின் காப்புரிமை வழக்கு : சோனி நிறுவனம் வருமானம் தாக்கல்... அடுத்து ‛டியூட்' படத்திற்கும் சிக்கல் | அக்டோபர் 31ம் தேதி 'காந்தாரா சாப்டர்-1' படத்தின் ஆங்கில பதிப்பு வெளியாகிறது! | டியூட் விவாதங்களை உருவாக்கி உள்ளது, ஆனால்... : பிரதீப் ரங்கநாதன் | தீபாவளி கொண்டாடிய ரவி மோகன், ஜி.வி .பிரகாஷ், யோகி பாபு, பாடகி கெனிஷா! | காதல் தோல்வியால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்!- சொல்கிறார் ராஷ்மிகா | ஹீரோயின் இல்லாமல் தேங்கி நிற்கும் கவின் படம்! | ‛டாடா' இயக்குனருடன் கைகோர்க்கும் துருவ் விக்ரம் | கார்த்திக் சுப்பராஜ் அடுத்த படம் குறித்து அப்டேட் இதோ! |
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அடுத்த வாரம் அல்டிமேட் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது. அதற்குள் போட்டியாளர்கள் யாராவது ஒருவர், பணத்துடன் வெளியேறும் பணப்பெட்டி டாஸ்க் நடைபெற்றது. பணப்பெட்டியின் ஆரம்ப தொகை 3 லட்சமாக இருந்த போது நிரூப் அதை எடுத்துக் கொண்டு வெளியேறியதாக செய்திகள் வெளியானது. ஆனால், அது உண்மையல்ல. 6, 7, 8 லட்சம் என படிப்படியாக உயர்ந்த போது ஜூலி மட்டுமே லேசாக ஜெர்க் கொடுத்தார். எனவே, அவர் தான் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியே செல்வார் என அனைவரும் எதிர்பார்த்தனர்.
தாமரையின் குடும்ப சூழலை வைத்து அவர் பணப்பெட்டியை எடுத்துக்கொள்ளலாம் எனவும் மக்கள் பரிந்துரை செய்து வந்தனர். இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஸ்ருதி பெரியசாமி பணப்பெட்டியுடன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். 15 லட்சம் பணப்பெட்டி உடன் வெளியேற ஸ்ருதி, ஜூலி முயன்றனர். இவர்களுக்கு சில டாஸ்கள் வைக்கப்பட்டன. இதில் ஸ்ருதி வெற்றி பெற்று 15 லட்சம் பணத்துடன் ஸ்ருதி வெளியேறினார். இதுவரை டப் கொடுத்து விளையாடிய ஸ்ருதிக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.