நிவேதா பெத்துராஜ் திருமணம் ரத்தா...? | மாப்பிள்ளை அவர்தான் ஆனால்.. என்கிற பாணியில் நடிகை வழக்கில் கருத்து தெரிவிக்கும் மலையாள நட்சத்திரங்கள் | பெப்காவில் திலீப்பை சேர்க்க முயற்சி ; ராஜினாமா செய்த பெண் டப்பிங் கலைஞர் | தக்க சமயத்தில் உதவி செய்வதில் சூர்யா எம்ஜிஆர் மாதிரி : விநியோகஸ்தர் சக்திவேலன் | அமெரிக்காவில் சிவகார்த்திகேயன், வெங்கட்பிரபு | பிக்பாஸ் ஜூலிக்கு டும் டும் : நிச்சயதார்த்தம் நடந்தது | பெங்களூருவிலும் மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறக்கும் மகேஷ் பாபு | படப்பிடிப்பு தொடங்கும் முன் ஓடிய ஹீரோயின் : டக்கென கமிட்டான மெகாலி | படையப்பா ரீ ரிலீஸ் : ரம்யா கிருஷ்ணன் மகிழ்ச்சி | உண்மை கதையில் விக்ரம் பிரபு |

ரஜினி , கமல் ஆகிய இருவரும் விரைவில் ஒரு படத்தில் இணைந்து நடிக்க இருப்பதாகவும், அந்த படத்தை 'கூலி' படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கப் போவதாகவும் செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால் அதையடுத்து ரஜினி மீடியாக்களை சந்தித்தபோது, கமலுடன் மீண்டும் இணைந்து நடிக்க தான் ஆர்வமாக இருப்பதாகவும் அதற்கான கதை, இயக்குனர் இன்னும் முடிவாகவில்லை என்றும் ஒரு செய்தி வெளியிட்டிருந்தார். அதன்மூலம் அந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவில்லை என்பது தெரியவந்தது.
இந்தநிலையில் ஒரு விருது விழா நிகழ்ச்சியில் ரஜினியின் இளைய மகளான இயக்குனர் சவுந்தர்யா ரஜினி அப்படம் குறித்து ஒரு தகவல் வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், ''தமிழ் சினிமாவின் இரண்டு பெரிய ஜாம்பவான்களான ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் விரைவில் ஒரு படத்தில் இணைய உள்ளார்கள். ஆனால் அந்த மெகா படத்தை யார் இயக்குவார்கள் என்பது தெரியவில்லை. அந்த விபரங்கள் அனைத்தும் தற்போது செயல்பாட்டில் உள்ளன. சரியான நேரத்தில் அந்த படம் குறித்து அறிவிப்பார்கள்'' என்று கூறினார்.
அதை அடுத்து அதே மேடையில் இருந்த கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன், ''மீண்டும் அவர்கள் இருவரையும் நாங்கள் ஒன்றாக பார்க்க வேண்டும் என்று கனவு கண்டோம். எல்லோரையும் போலவே அந்த ஒரு படத்திற்காக நாங்களும் காத்திருக்கிறோம்'' என்று கூறிய ஸ்ருதிஹாசன், ''ரஜினி சாரின் படங்களில் எனக்கு மிகவும் பிடித்தது படையப்பா. அவருடன் கூலி படத்தில் இணைந்து நடித்ததால் நான் மகிழ்ச்சி அடைந்தேன்'' என்றும் தெரிவித்திருக்கிறார்.