பெத்தி படத்தின் டப்பிங் பணிகளை துவங்கிய ராம் சரண் | அதிர்ஷ்டசாலி படத்திற்கு அதிர்ஷ்டம் | கடைசி நிமிடங்களில் கத்தாரில் இருந்து தப்பிய சந்தோஷ் நாராயணன் | கிராமத்து கோவிலில் சிறப்பு பூஜை நடத்திய விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய ரியோ ராஜ் | அஜித் கார் ரேஸ் சினிமாவாகிறது : சிவகார்த்திகேயன், அனிருத் நடிக்கிறார்களா? | நான் கோமாளி அல்ல, ஏமாளி : கூல் சுரேஷ் கண்ணீர் | ஜூலையில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ரிலீஸ் : கருப்பு எப்போது... | 'டாடா' போஸ்டர் ஸ்டைலில் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' போஸ்டர் | சினிமாவை விட்டு விலக நினைத்தேன்: நிவேதிதா சதீஷ் |

ரஜினி , கமல் ஆகிய இருவரும் விரைவில் ஒரு படத்தில் இணைந்து நடிக்க இருப்பதாகவும், அந்த படத்தை 'கூலி' படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கப் போவதாகவும் செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால் அதையடுத்து ரஜினி மீடியாக்களை சந்தித்தபோது, கமலுடன் மீண்டும் இணைந்து நடிக்க தான் ஆர்வமாக இருப்பதாகவும் அதற்கான கதை, இயக்குனர் இன்னும் முடிவாகவில்லை என்றும் ஒரு செய்தி வெளியிட்டிருந்தார். அதன்மூலம் அந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவில்லை என்பது தெரியவந்தது.
இந்தநிலையில் ஒரு விருது விழா நிகழ்ச்சியில் ரஜினியின் இளைய மகளான இயக்குனர் சவுந்தர்யா ரஜினி அப்படம் குறித்து ஒரு தகவல் வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், ''தமிழ் சினிமாவின் இரண்டு பெரிய ஜாம்பவான்களான ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் விரைவில் ஒரு படத்தில் இணைய உள்ளார்கள். ஆனால் அந்த மெகா படத்தை யார் இயக்குவார்கள் என்பது தெரியவில்லை. அந்த விபரங்கள் அனைத்தும் தற்போது செயல்பாட்டில் உள்ளன. சரியான நேரத்தில் அந்த படம் குறித்து அறிவிப்பார்கள்'' என்று கூறினார்.
அதை அடுத்து அதே மேடையில் இருந்த கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன், ''மீண்டும் அவர்கள் இருவரையும் நாங்கள் ஒன்றாக பார்க்க வேண்டும் என்று கனவு கண்டோம். எல்லோரையும் போலவே அந்த ஒரு படத்திற்காக நாங்களும் காத்திருக்கிறோம்'' என்று கூறிய ஸ்ருதிஹாசன், ''ரஜினி சாரின் படங்களில் எனக்கு மிகவும் பிடித்தது படையப்பா. அவருடன் கூலி படத்தில் இணைந்து நடித்ததால் நான் மகிழ்ச்சி அடைந்தேன்'' என்றும் தெரிவித்திருக்கிறார்.




