எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
சில தினங்களுக்கு முன் இணையத்தில் நடிகை குஷ்புவின் புகைப்படம் ஒன்று வைரலானது. அதில் அவர் கன்னத்தில் நான்கு விரல்களின் தடம் பதிந்திருப்பதையும், கன்னம் வீங்கியிருப்பதையும் பார்த்து பலரும் பதறிப்போனார்கள். நடிகை குஷ்புவும் அதற்கேற்றார் போல் #ஸ்டேன்ட்வித்மீ, #ஸேநோடூவைலன்ஸ், #ஸ்பீக்அப்நவ் ஆகிய ஹாஸ்டாக்குகளை போட்டிருந்தார். இதனால் பலரும் குஷ்புவுக்கு ஏதோ அநீதி நிகழ்ந்துவிட்டதாக அவரை நலம் விசாரித்து வந்தார்கள். இந்நிலையில் அது தொடர்பில் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
உண்மையில் குஷ்புவை யாரும் அடிக்கவில்லை. அவர் புதிதாக நடிக்கும் சீரியலுக்கான புரோமோஷனுக்காக தான் அப்படி ஒரு போட்டோவை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பி விட்டுள்ளார். குஷ்பு, கலர்ஸ் தமிழ் சேனலுக்காக புதிதாக நடித்து வரும் சீரியல் மீரா. இதில் ஆணாதிக்க சிந்தனையுள்ள கணவரிடம் இருந்து பிரிந்து சென்று சொந்தக்காலில் ஜெயித்துக்காட்டும் பெண்ணாக குஷ்பு நடிக்கவுள்ளார். மேலும், இந்த சீரியல் சமூகத்தில் நிகழ்ந்து வரும் ஆணாதிக்கம், பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கேள்வி கேட்கும் வகையில் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.