மத்திய அமைச்சருக்கே இந்த நிலை என்றால் ? சுரேஷ்கோபி பட சென்சார் சர்ச்சை குறித்து மாநில அமைச்சர் காட்டம் | மீண்டும் துடிப்புடன் படப்பிடிப்புக்கு தயாரான மம்முட்டி | ஜுலை 4ல் 6 படங்கள் ரிலீஸ் | 2025ன் 6 மாதங்களில் 122 படங்கள் ரிலீஸ் | விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு |
கிருஷ்ணன் - ஸ்ருதி நடிப்பில் தாய் பாசத்தை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் தொடர் தாலாட்டு. ரசிகர்களின் மனதில் நெருக்கமாக இடம் பிடித்துள்ள இந்த செண்டிமெண்ட் தொடரில், தற்போது வில்லியாக பிரபல் சீரியல் நடிகை மவுனிகா எண்ட்ரி கொடுத்துள்ளார். மவுனிகா, வீஜே மலர் நடித்து வந்த தாரா என்கிற கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். சில நாட்களுக்கு முன்பு வரை சின்ன சின்ன வில்லத்தனங்களை செய்து கொண்ட இந்த கதாபாத்திரம் தற்போது அதிக முக்கியத்துவம் பெறுவது போல் திரைக்கதை மாற்றப்பட்டுள்ளது.
அதோடு, வீஜே மலரும் தொடரை விட்டு விலகிய காரணத்தால் அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவர் என மெளனிகாவை சீரியல் குழுவினர் தேர்ந்தெடுத்துள்ளனர். மவுனிகா, வானத்தை போல தொடரிலும், ஜீ தமிழின் செம்பருத்தி தொடரிலும் ஏற்கனவே வில்லியாக நடித்து வருகிறார். அவர் தற்போது தாலாட்டு தொடரில் எண்ட்ரி கொடுத்துள்ளதால் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.