ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கிருஷ்ணன் - ஸ்ருதி நடிப்பில் தாய் பாசத்தை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் தொடர் தாலாட்டு. ரசிகர்களின் மனதில் நெருக்கமாக இடம் பிடித்துள்ள இந்த செண்டிமெண்ட் தொடரில், தற்போது வில்லியாக பிரபல் சீரியல் நடிகை மவுனிகா எண்ட்ரி கொடுத்துள்ளார். மவுனிகா, வீஜே மலர் நடித்து வந்த தாரா என்கிற கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். சில நாட்களுக்கு முன்பு வரை சின்ன சின்ன வில்லத்தனங்களை செய்து கொண்ட இந்த கதாபாத்திரம் தற்போது அதிக முக்கியத்துவம் பெறுவது போல் திரைக்கதை மாற்றப்பட்டுள்ளது.
அதோடு, வீஜே மலரும் தொடரை விட்டு விலகிய காரணத்தால் அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவர் என மெளனிகாவை சீரியல் குழுவினர் தேர்ந்தெடுத்துள்ளனர். மவுனிகா, வானத்தை போல தொடரிலும், ஜீ தமிழின் செம்பருத்தி தொடரிலும் ஏற்கனவே வில்லியாக நடித்து வருகிறார். அவர் தற்போது தாலாட்டு தொடரில் எண்ட்ரி கொடுத்துள்ளதால் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.