கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை | 20 வருடமாக நானும் ஹனிரோஸும் இப்போதும் பேச்சுலர்ஸ் தான் : உருகும் மலையாள நடிகர் | இதயக்கனி, திருப்பாச்சி, இந்தியன் 2 - ஞாயிறு திரைப்படங்கள் |
ஜீ தமிழ் தொலைக்காட்சியின் 'என்றென்றும் புன்னகை' தொடரில் ஹீரோவாக சித்து கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தீபக். இவர், சின்னத்திரை நடிகையான அபிநவ்யா என்பவரை காதலித்து வந்த நிலையில், இருவரது திருமணமும் சமீபத்தில் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் திருமணமான கையோடு தீபக், 'என்றென்றும் புன்னகை' தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'என்றென்றும் புன்னகை' தொடரிலிருந்து தனிப்பட்ட சில காரணங்களால் அதிகாரப்பூர்வமாக விலகுகிறேன். நீங்கள் கொடுத்த அன்பிற்கும், ஆதரவிற்கும் மகிழ்ச்சி. இதே அன்பை புது சித்துவுக்கும் வழங்குங்கள். புதிய ப்ராஜெக்டில் விரைவில் சந்திக்கிறேன்' என அதில் தெரிவித்துள்ளார்.
கடந்த 2020ஆம் ஆண்டு ஒளிபரப்பாக ஆரம்பித்த இந்த தொடரில், நட்சத்திரா ஸ்ரீனிவாஸ், கவிதா, நிதின் ஐயர், ராஜேஸ்வரி, சுஷ்மா நாயர் உள்ளிட்ட நடிகர்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். பிரபல சின்னத்திரை நடிகை நீலிமா ராணி இந்த தொடரை தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.