டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் தனித்துவமான முறையில் கதை சொல்லி ரசிகர்களை ஈர்த்து வந்தது விஜய் டிவி. ஆனால், விஜய் டிவியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட புதிய தொடர் ஒன்று ஆரம்பித்த சில நாட்களிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரஜின், சரண்யா துராடி, லதா, நிரோஷா, விக்னேஷ் என நடிகர் பட்டாளத்துடன் சமீபத்தில் ஒளிபரப்பாக ஆரம்பித்த தொடர் 'வைதேகி காத்திருந்தாள்'.கடந்த டிசம்பர் 20 ஆம் தேதி ஒளிபரப்பாக ஆரம்பித்த இந்த தொடர் சரியாக 37 எபிசோடுகள் வரை மட்டுமே ஒளிபரப்பாகியுள்ளது.
இந்த தொடரில் ஹீரோவாக நடித்து வந்த பிரஜின் தொடரை விட்டு சமீபத்தில் விலகினார். அவருக்கு பதிலாக முன்னா ரஹ்மான் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனாலும், கடந்த பிப்ரவரி 4 ஆம் தேதிக்கு பிறகு இந்த தொடர் ஒளிபரப்பாகவில்லை. அதுமட்டுமில்லாமல் ஸ்லாட்டிலும் அந்த தொடர் இடம்பெறவில்லை. இந்நிலையில் இந்த தொடர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதா? இல்லை மொத்தமாக முடித்து வைக்கப்பட்டதா? என்ற அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை.