கமல் பிறந்தநாள் : ரீ-ரிலீஸாகும் ‛நாயகன்' | படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன் | சிம்பு மீது அதிருப்தியில் தமன்? | மீண்டும் இணையும் மதகஜராஜா கூட்டணி | சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி |
தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் தனித்துவமான முறையில் கதை சொல்லி ரசிகர்களை ஈர்த்து வந்தது விஜய் டிவி. ஆனால், விஜய் டிவியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட புதிய தொடர் ஒன்று ஆரம்பித்த சில நாட்களிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரஜின், சரண்யா துராடி, லதா, நிரோஷா, விக்னேஷ் என நடிகர் பட்டாளத்துடன் சமீபத்தில் ஒளிபரப்பாக ஆரம்பித்த தொடர் 'வைதேகி காத்திருந்தாள்'.கடந்த டிசம்பர் 20 ஆம் தேதி ஒளிபரப்பாக ஆரம்பித்த இந்த தொடர் சரியாக 37 எபிசோடுகள் வரை மட்டுமே ஒளிபரப்பாகியுள்ளது.
இந்த தொடரில் ஹீரோவாக நடித்து வந்த பிரஜின் தொடரை விட்டு சமீபத்தில் விலகினார். அவருக்கு பதிலாக முன்னா ரஹ்மான் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனாலும், கடந்த பிப்ரவரி 4 ஆம் தேதிக்கு பிறகு இந்த தொடர் ஒளிபரப்பாகவில்லை. அதுமட்டுமில்லாமல் ஸ்லாட்டிலும் அந்த தொடர் இடம்பெறவில்லை. இந்நிலையில் இந்த தொடர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதா? இல்லை மொத்தமாக முடித்து வைக்கப்பட்டதா? என்ற அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை.