ராம்சரண் ஒரு உண்மையான ஜென்டில்மேன் என்கிறார் ஜான்வி கபூர்! | இட்லிகடை படத்தின் முதல் நாள் வசூல்? 100 கோடியை அள்ளுமா? | விஜயை கைது செய்யணுமா? நடிகர் பார்த்திபன் பதில் இதுதான் | டிச.,5ல் ரிலீசாகும் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2: தாண்டவம்' | தென்தமிழகத்து இளைஞர்களின் கதை 'பைசன்': இயக்குனர் மாரி செல்வராஜ் | ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் | மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு | கேரளாவை தொடர்ந்து ஹிந்தியிலும் சென்சார் போர்டு சிக்கலில் ஜானகி டைட்டில் | தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்! | என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் |
சின்னத்திரை தொகுப்பாளினியான மணிமேகலைக்கு, அவரது துடுக்குத்தனமான ஆட்டிடியூட் மற்றும் பேச்சு சாமர்த்தியத்திற்காக பலரும் ரசிகர்களாக உள்ளனர். வீஜே கேரியரை ஸ்டார்ட் செய்த அவர், திருமணத்திற்கு பிறகு சிறு ப்ரேக் எடுத்துக் கொண்டு தற்போது மீண்டும் இறங்கி அடித்து வருகிறார்.
விஜய் டிவியின் குக் வித் கோமாளி மற்றும் மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் போட்டியாளராக கலந்து கொண்டார். இதனையடுத்து சில ஸ்பெஷல் ஷோக்களையும் தொகுத்து வழங்கியுள்ளார். சமீபகாலங்களில் பட்டிமன்ற மேடைகளிலும் ஆக்டிவாக இருக்கும் தனது திறமையான தர்க்கத்தால் கைத்தட்டல்களை பெற்று வருகிறார்.
இந்நிலையில், அவர் தனது மாணவ பருவத்தில் பள்ளிக்கூடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதன் கேப்ஷனில், 'எப்போதுமே என் கையில மைக் இருக்கும்' எனக் குறிப்பிட்டுள்ளார். மணிமேகலைக்கு பேசுவது மிகவும் பிடிக்கும். வீஜே பணிக்கும், பட்டிமன்ற மேடைக்கும் அவர் அவ்வளவு உழைப்பை செய்து வருகிறார். சிறுவயதிலிருந்தே தனக்கு பேசுவது மிகப்பிடிக்கும் என்பதை இந்த புகைப்படத்தின் மூலம் மணிமேகலை அனைவருக்கும் தெரிவித்துள்ளார்.