இறந்து போனவர்களை ஏன் பாட வைக்க வேண்டும்? ஹாரிஸ் ஜெயராஜ் கேள்வி | தமிழகத்தில் மட்டும் 100 கோடி வசூலை கடந்த 'குட் பேட் அக்லி' | தமன்னா பற்றிய பகிர்வு: மீண்டும் சர்ச்சையில் ஊர்வசி ரத்தேலா | குட் பேட் அக்லி வெற்றி எதிரொலி! ஆதிக் ரவிச்சந்திரனுக்கு அஜித் கொடுத்த அட்வைஸ்!! | விஜய்யின் 'சச்சின்' படத்தின் டிரைலர் வெளியானது! ஏப்ரல் 18ல் ரீரிலீஸ்! | மகள் நந்தனாவின் 14ம் ஆண்டு நினைவு நாளில் பாடகி சித்ரா வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு! | வெளியீட்டுத் தேதிகளுடன் அடுத்தடுத்து வரிசை கட்டும் படங்கள் | டென் ஹவர்ஸ் : மீண்டும் ஒரு திருப்பத்திற்காக காத்திருக்கும் சிபிராஜ் | 'நம்பிக்கை உறுதி ஆவணத்தில்' கையெழுத்திட்ட பவன் கல்யாண் மனைவி | ஏப்., 18ல் ரெட்ரோ பட இசை வெளியீட்டு விழா |
சின்னத்திரை தொகுப்பாளினியான மணிமேகலைக்கு, அவரது துடுக்குத்தனமான ஆட்டிடியூட் மற்றும் பேச்சு சாமர்த்தியத்திற்காக பலரும் ரசிகர்களாக உள்ளனர். வீஜே கேரியரை ஸ்டார்ட் செய்த அவர், திருமணத்திற்கு பிறகு சிறு ப்ரேக் எடுத்துக் கொண்டு தற்போது மீண்டும் இறங்கி அடித்து வருகிறார்.
விஜய் டிவியின் குக் வித் கோமாளி மற்றும் மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் போட்டியாளராக கலந்து கொண்டார். இதனையடுத்து சில ஸ்பெஷல் ஷோக்களையும் தொகுத்து வழங்கியுள்ளார். சமீபகாலங்களில் பட்டிமன்ற மேடைகளிலும் ஆக்டிவாக இருக்கும் தனது திறமையான தர்க்கத்தால் கைத்தட்டல்களை பெற்று வருகிறார்.
இந்நிலையில், அவர் தனது மாணவ பருவத்தில் பள்ளிக்கூடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதன் கேப்ஷனில், 'எப்போதுமே என் கையில மைக் இருக்கும்' எனக் குறிப்பிட்டுள்ளார். மணிமேகலைக்கு பேசுவது மிகவும் பிடிக்கும். வீஜே பணிக்கும், பட்டிமன்ற மேடைக்கும் அவர் அவ்வளவு உழைப்பை செய்து வருகிறார். சிறுவயதிலிருந்தே தனக்கு பேசுவது மிகப்பிடிக்கும் என்பதை இந்த புகைப்படத்தின் மூலம் மணிமேகலை அனைவருக்கும் தெரிவித்துள்ளார்.