நடிகை ராதிகாவுக்கு டெங்கு : மருத்துவமனையில் அனுமதி | மோசடி வழக்கு : காமெடி நடிகர் சீனிவாசன் கைது | பிரபாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் | சோசியல் மீடியாவில் 7 ஆண்டுகளாக அவதூறு பரப்பிய பெண்ணை அடையாளப்படுத்திய பிரித்விராஜ் மனைவி | அசினுடன் நடந்த டெஸ்ட் ஷூட் : பஹத் பாசிலுக்கு கைமாறிய பிரித்விராஜ் படம் | நடிகர் சங்கத்திற்கு பெண் தலைமை : மோகன்லால் ஆலோசனைப்படி வேட்பு மனுவை வாபஸ் பெற்ற நடிகர் | ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு |
சின்னத்திரை பிரபலமான மணிமேகலை தமிழகத்தில் பலருக்கும் பேவரைட்டான நபராக இருந்து வருகிறார். இவரது வளர்ச்சி காண்போரை வியக்க வைக்கும் அளவிற்கு பிரம்மாண்டமாக இருக்கிறது. கொரோனா காலக்கட்டத்தில் சொந்த கிராமத்தில் நிலம் வாங்கி பண்ணை வீடு ஒன்றை கட்டியிருந்த மணிமேகலை, சில மாதங்களிலேயே சென்னையில் அப்பார்ட்மெண்ட் ஒன்றை வாங்கினார். இதுபோக அவரிடம் இரண்டு சொகுசு கார்கள், ஒரு பைக் இருக்கிறது.
இந்நிலையில், சென்னையிலேயே மேலும் ஒரு புதிய அப்பார்ட்மெண்டை மணிமேகலை வாங்கியிருக்கிறார். அந்த வீட்டிற்கு விரைவிலேயே குடியேறப்போவதாகவும் அவர் அண்மையில் வெளியிட்டுள்ள பதிவில் மணிமேகலை குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து அவரது வளர்ச்சியை கண்டு மகிழ்ச்சியடைந்துள்ள ரசிகர்கள் மணிமேகலைக்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.