2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

சின்னத்திரை பிரபலமான மணிமேகலை தமிழகத்தில் பலருக்கும் பேவரைட்டான நபராக இருந்து வருகிறார். இவரது வளர்ச்சி காண்போரை வியக்க வைக்கும் அளவிற்கு பிரம்மாண்டமாக இருக்கிறது. கொரோனா காலக்கட்டத்தில் சொந்த கிராமத்தில் நிலம் வாங்கி பண்ணை வீடு ஒன்றை கட்டியிருந்த மணிமேகலை, சில மாதங்களிலேயே சென்னையில் அப்பார்ட்மெண்ட் ஒன்றை வாங்கினார். இதுபோக அவரிடம் இரண்டு சொகுசு கார்கள், ஒரு பைக் இருக்கிறது.
இந்நிலையில், சென்னையிலேயே மேலும் ஒரு புதிய அப்பார்ட்மெண்டை மணிமேகலை வாங்கியிருக்கிறார். அந்த வீட்டிற்கு விரைவிலேயே குடியேறப்போவதாகவும் அவர் அண்மையில் வெளியிட்டுள்ள பதிவில் மணிமேகலை குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து அவரது வளர்ச்சியை கண்டு மகிழ்ச்சியடைந்துள்ள ரசிகர்கள் மணிமேகலைக்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.