வெற்றிமாறனுக்கு பதிலாக மலையாள இயக்குனர்.. சூர்யாவின் அதிரடி முடிவு! | இலங்கை பார்லிமென்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மோகன்லால் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' தயாரிப்பாளருக்கு நீதிமன்றத்தில் ஆஜராக ஒரு வாரம் அவகாசம் நீட்டிப்பு | அப்படி செய்ய மாட்டேன் என பிடிவாதமாக நின்றார் நயன்தாரா ; பிரமிக்கும் யோகி பாபு | பஹத் பாசிலின் 'கராத்தே சந்திரன்' துவங்குவது எப்போது? | அஜித், சிவகார்த்திகேயன் படங்களில் மோகன்லால் | வெற்றி மட்டுமே பேசப்படும்: இது திரிஷா தத்துவம் | ரஜினி 50வது ஆண்டில் 2 படங்கள்: ஆயிரம் கோடியை அள்ளவும் பிளான் | 'குபேரா'வில் 'சமீரா' பற்றி ராஷ்மிகா மந்தனா நீளமான பதிவு | படத்தில் நடிக்கும் அனைவருக்கும் 'ஸ்கிரிப்ட்' கொடுக்க வேண்டும்: விக்ரம் பிரபு வேண்டுகோள் |
சின்னத்திரை பிரபலங்கள் இடையே நாள்தோறும் வளர்பிறையாய் வளர்ந்து கொண்டிருக்கிறது மணிமேகலையின் பஞ்சாயத்து. மணிமேகலை பிரியங்காவுக்கு இடையே நடந்த பிர்சனையானது தற்போது மணிமேகலைக்கும், பிரியங்கா ஆதரவாளர்கள் மற்றும் விஜய் டிவி பிரபலங்களுக்கும் இடையே நடக்கும் பிரச்னையாக மாறிவிட்டது.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை மணிமேகலை வெளியிட்ட வீடியோ ஒன்றில் சிலரை குறிவைத்து 'சொம்புகள்' என்று கிண்டலடித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள மா.க.பா ஆனந்த், 'சனிக்கிழமை எல்லாரும் பீரியா இருப்பாங்க. சோ வீடியோ போடும். வாங்க செருப்பு போட்டோ தான் இருக்கு' என பதிவிட்டு செருப்பு புகைப்படத்தை போட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து டிஜே ப்ளாக்கும் செருப்பு மற்றும் துடைப்பம் புகைப்படத்தை வெளியிட்டு 'நம்மை சுற்றியிருக்கும் அமானுஷ்யங்களை தவிர்ப்பது நல்லது' என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், குக் வித் கோமாளி பிரபலமான சரத் அண்மையில் அளித்த பேட்டியில், 'மணிமேகலை இந்த பிரச்னையை வைத்து வீடியோ வெளியிட்டு சம்பாதிக்கிறார்' என விமர்சித்துள்ளார்.
இவ்வாறாக பல விஜய் டிவி பிரபலங்களும் மணிமேகலையை வறுத்தெடுத்து வருகின்றனர். அதேசமயம் ரசிகர்களோ மணிமேகலைக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.