மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

சின்னத்திரை பிரபலங்கள் இடையே நாள்தோறும் வளர்பிறையாய் வளர்ந்து கொண்டிருக்கிறது மணிமேகலையின் பஞ்சாயத்து. மணிமேகலை பிரியங்காவுக்கு இடையே நடந்த பிர்சனையானது தற்போது மணிமேகலைக்கும், பிரியங்கா ஆதரவாளர்கள் மற்றும் விஜய் டிவி பிரபலங்களுக்கும் இடையே நடக்கும் பிரச்னையாக மாறிவிட்டது.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை மணிமேகலை வெளியிட்ட வீடியோ ஒன்றில் சிலரை குறிவைத்து 'சொம்புகள்' என்று கிண்டலடித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள மா.க.பா ஆனந்த், 'சனிக்கிழமை எல்லாரும் பீரியா இருப்பாங்க. சோ வீடியோ போடும். வாங்க செருப்பு போட்டோ தான் இருக்கு' என பதிவிட்டு செருப்பு புகைப்படத்தை போட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து டிஜே ப்ளாக்கும் செருப்பு மற்றும் துடைப்பம் புகைப்படத்தை வெளியிட்டு 'நம்மை சுற்றியிருக்கும் அமானுஷ்யங்களை தவிர்ப்பது நல்லது' என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், குக் வித் கோமாளி பிரபலமான சரத் அண்மையில் அளித்த பேட்டியில், 'மணிமேகலை இந்த பிரச்னையை வைத்து வீடியோ வெளியிட்டு சம்பாதிக்கிறார்' என விமர்சித்துள்ளார்.
இவ்வாறாக பல விஜய் டிவி பிரபலங்களும் மணிமேகலையை வறுத்தெடுத்து வருகின்றனர். அதேசமயம் ரசிகர்களோ மணிமேகலைக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.




