Advertisement

சிறப்புச்செய்திகள்

7ஜி ரெயின்போ காலனி 2 அப்டேட் சொன்ன செல்வராகவன் | ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் வெளியானது! | விருது மாற்றி கிடைத்ததில் கொஞ்சம் வருத்தம் தான் : மஞ்சும்மல் பாய்ஸ் இசையமைப்பாளர் | நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்த மாதுரி தீக்ஷித் : கோபத்தில் வெளியேறிய ரசிகர்கள் | கேரள அரசு குழந்தை நட்சத்திர விருதுகள் மிஸ்ஸிங் : கிளம்பியது சர்ச்சை | ஆர்யன் பட கிளைமாக்ஸ் மாற்றம் : ஹீரோ விஷ்ணு விஷால் அறிவிப்பு | சாய் அபயங்கரை வாழ்த்திய அல்லு அர்ஜுன்! | வேகம் எடுக்கும் விஜய்யின் 'ஜனநாயகன்' படக்குழு! இம்மாதம் முதல் பாடல் வெளியாகிறது! | அஜித் 64வது படத்தில் நடிக்க விஜய்சேதுபதி, லாரன்ஸிடம் பேச்சுவார்த்தை! | டிரெயின் பட ரிலீசில் அதிரடி முடிவு எடுத்த தாணு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

80 ஆண்டுகளை நிறைவு செய்த 'மீரா'

03 நவ, 2025 - 01:04 IST
எழுத்தின் அளவு:
Meera-turns-80
Advertisement


தமிழ் சினிமா உலகின் முக்கியமான படங்களில் ஒன்று எல்லீஸ் ஆர் டங்கன் இயக்கத்தில், எம்எஸ் சுப்புலட்சுமி நடித்து வெளிவந்த படம் 'மீரா'. 1945ம் ஆண்டு தீபாவளி நாளான நவம்பர் 3ம் தேதி அப்படம் வெளிவந்தது. இன்றுடன் 80 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. அந்தப் படத்தைத் தியேட்டர்களில் பார்த்த அனுபவம் கொண்ட யாரோ ஒரு சிலர்தான் இன்று இருக்க வாய்ப்புண்டு.

1949ம் ஆண்டு செக்கோஸ்லோவேகியா, பெரு, டொரான்டோ, வெனிஸ் ஆகிய இடங்களில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்ட பெருமை பெற்ற ஒரு திரைப்படம் 'மீரா'.

கிருஷ்ண பகவானின் தீவிர பக்தையான மீரா பற்றிய கதைதான் 'மீரா'. 1945ல் இந்தப் படம் வெளிவருவதற்கு முன்பே 1936ல் 'மீராபாய்' என்ற ஒரு படமும், 1938ல் 'பக்த மீரா' என்ற மற்றொரு படமும் வெளிவந்தன.

1945ல் வெளிவந்த 'மீரா' படத்தின் மூலம் இந்திய அளவில் பெரும் புகழைப் பெற்றார் எம்எஸ் சுப்புலட்சுமி. அப்படம் வெளிவருவதற்கு முன்பு 1938ல் வெளியான 'சேவாசதனம்' என்ற படத்தில் நடிகையாக அறிமுகமாகி இருந்தார் சுப்புலட்சுமி. ஆனால், 'மீரா' தான் அவரை இந்தியா முழுவதும் பிரபலமடைய வைத்தது.

பிரபல எழுத்தாளர் கல்கி, கதை வசனம் எழுத, எஸ்வி வெங்கட்ராமன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். சித்தூர் வி நாகையா, செகளத்தூர் சாமா, கே சாரங்கபாணி, டிஎஸ் பாலையா, கேஆர் செல்வம், டிஎஸ் துரைராஜ், ஆர் சந்தானம் ஆகியோருடன் சிறிய வேடம் ஒன்றில் எம்ஜிஆர் நடித்திருந்தார். இப்படத்தில் இடம் பெற்ற 'காற்றினிலே வரும் கீதம்' பாடலை இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் கேட்டு ரசிக்கும் இசை ரசிகர்கள் உள்ளார்கள்.

1947 இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு இந்தப் படம் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. கவிக்குயில் சரோஜினி நாயுடு படத்தின் ஆரம்பத்தில் , படத்தையும் எம்எஸ் சுப்புலட்சுமியையும் பாராட்டிப் பேசியது இணைக்கப்பட்டது. படத்தின் பிரிவியு காட்சிக்கு நேரு, மவுண்ட் பேட்டன் இருவரும் இணைந்து வந்து படத்தைப் பார்த்துப் பாராட்டினர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ரம்பாவுக்குப் பிறகு ரகுல் ப்ரீத்…இப்படி ஒரு கிளாமர் !!ரம்பாவுக்குப் பிறகு ரகுல் ... 21 ஆண்டுகளுக்குபின் ரீ ரிலீஸ் ஆகிறது சேரனின் ‛ஆட்டோகிராப்' 21 ஆண்டுகளுக்குபின் ரீ ரிலீஸ் ஆகிறது ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in