புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
சின்னத்திரையில் சூப்பர் ஹிட் அடித்து ஆல் டைம் பேவரைட்டாக மக்கள் மனதில் இடம்பிடித்த தொடர் கோலங்கள். இந்த தொடர் வெளியாகி 15 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் அண்மையில் யு-டியூபில் வெளியாகியும் நல்ல ரீச்சை பெற்று வருகிறது. இதற்கிடையில் சோஷியல் மீடியாவின் வளர்ச்சியால் இந்த தொடரில் இடம் பெற்ற தோழர் மற்றும் தில்லா கதாபாத்திரங்களுக்கு தற்போது சிறப்பு கவனம் பெற்று வருகிறது.
இதில் நடித்த நடிகர்களை பல ஊடகங்கள் பேட்டி எடுத்து வரும் நிலையில் தில்லா கதாபாத்திரத்தில் நடித்த சுப்பிரமணி தற்போது தான் குடும்ப வாழ்க்கையில் நுழைய போவதாக கூறினார். கிட்டத்தட்ட 50 வயதை நெருங்கிவிட்ட தில்லா சுப்பிரமணி சமூக சேவையில் கவனம் இருந்ததால் 24 வயதில் கல்யாணம் வேண்டாம் என்று முடிவெடுத்ததாகவும், இப்போது பலரும் இந்த வயதில் கல்யாணமா? என்று கேட்டாலும் அதையெல்லாம் தான் கண்டுகொள்ள போவதில்லை என்றும் கூறியுள்ளார்.