எங்கள் மண வாழ்க்கை ரகசியம் - 'சரிம்மா, சாரிம்மா': நடிகை ரோஜா | ஆஸ்கருக்கு செல்லும் 2 தமிழ் படங்கள் | 8 வருடங்களுக்கு பிறகு தமிழ் திரையில் ருஹானி சர்மா | தேர்தல் கமிஷன் தூதர் பதவியில் இருந்து நீது சந்திரா நீக்கம் | பிளாஷ்பேக்: பாலச்சந்திரமேனன் இயக்கிய தமிழ் படம் | பிளாஷ்பேக்: நிலவொளியில் ஒளிப்பதிவு செய்த முதல் ஒளிப்பதிவாளர் | ‛வாரணாசி' படத்தில் நடிக்க 30 கோடி சம்பளம் வாங்கிய பிரியங்கா சோப்ரா! | பிளாஷ்பேக்: எம் ஜி ஆர், சிவாஜியை மீண்டும் ஒரு படத்தில் நடிக்க வைக்க விரும்பிய ஏ வி எம் | திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் ஆளுங்கட்சி தலையீடு: தயாரிப்பாளர்கள் குமுறல் | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் நடித்து வந்தவர் ரச்சிதா மகாலட்சுமி. திடீரென அந்த சீரியலை விட்டு விலகினார். இதனையடுத்து நடிகரும், இயக்குனருமான குருப்ரசாத்தின் கன்னட படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி நடித்து வருகிறார். சில்வர் ஸ்கிரீனில் எண்ட்ரி கொடுத்துவிட்டதால் மீண்டும் தொலைக்காட்சிக்கு வரமாட்டார் என ரசிகர்கள் கவலையடைந்தனர். இந்நிலையில் அவர் சீரியலில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.
ரச்சிதா ஜீ தமிழ் தொலைக்காட்சியின் செம்பருத்தி தொடரில் அம்மன் ரோலில் கேமியோவாக நடித்துள்ளார். செம்பருத்தி தொடரில் கடந்த சில வாரங்களாக ரசிகர்களை ஈர்க்கும் வகையில் சீரியல் கதாநாயகிகளை அம்மன் கதாபாத்திரங்களில் நடிக்க வைக்க வைத்து வருகின்றனர். அந்த வகையில் ரச்சிதாவும் ஒரு அம்மனாக நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம் அவர் நினைத்தாலே இனிக்கும் தொடரில் தான் அம்மனாக நடிக்கிறார் எனவும் செய்திகள் பரவி வருவது குறிப்பிடத்தக்கது. அவர் அம்மனாக நடிக்கவுள்ள தகவல் உறுதியாகியுள்ள நிலையில் எந்த சீரியலில் நடிக்கிறார் என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்புகள் வெளியாகவில்லை.