வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடர் தமிழக குடும்ப பெண்களை வெகுவாக கவர்ந்துள்ளது. சமீபத்தில் அந்த தொடரின் வெற்றி விழா கொண்டாடிய போது சாமானிய ரசிகர்களில் சிலர் பாக்கியலட்சுமி கதாபாத்திரத்தை பார்த்து இன்ஸ்பியர் ஆகி வாழ்வில் சாதித்த கதைகளை பகிர்ந்து கொண்டனர். இந்நிலையில் அந்த தொடரில் தற்போது சமகால சமூக பிரச்னையை பேசி அதற்கு தீர்வு சொல்லும் வகையில் கதை அமைக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் மாணவிகளுக்கு பள்ளியிலும், பொதுவெளியிலும் நடக்கும் பாலியல் தொல்லைகள் குறித்த சம்பவங்களை மையப்படுத்தியும் அதற்கு தீர்வு கூறும் விதமாகவும் இந்த எபிசோடுகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்த சமூக பிரச்னையை சீரியல் மூலம் அனைவரிடமும் கொண்டு சேர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே சீரியல் குழுவினரின் நோக்கம் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக பள்ளி மாணவி கதாபாத்திரத்தில் ப்ரணிகா நடித்து வருகிறார். அவர் நடிக்கும் காட்சிகள் தற்போது ஒளிபரப்பாகி வருகின்றன.