ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சின்னத்திரை தொடர்களில் சப்போர்ட்டிங் ரோலில் நடித்து வந்த வைஷ்ணவி அருள்மொழி புதிய சீரியல் ஒன்றில் ஹீரோயினாக நடிக்கவுள்ளார். கலர்ஸ் தமிழின் 'மலர்' தொடரின் மூலம் நடிகையாக என்ட்ரி கொடுத்தவர் வைஷ்ணவி அருள்மொழி. தொடர்ந்து சின்னத்திரையில் பல ஹிட் தொடர்களில் முக்கிய வேடத்தில் நடித்து வந்த அவர் சின்னத்திரை ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளார்.
தற்போது விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஜீ தமிழின் புதிய சீரியல் ஒன்றில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு வைஷ்ணவிக்கு கிடைத்துள்ளது. மிக விரைவில் வெளியாகவுள்ள அந்த தொடரில் ராஜாமகள் புகழ் விஜய் ஹீரோவாகவும், வைஷ்ணவி அருள்மொழி ஹீரோயினாகவும் நடிக்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த செய்தி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஜீ தமிழ் தொலைக்காட்சி விரைவில் வெளியிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.