'ஸ்பிரிட்' படத்தில் சிரஞ்சீவி? சந்தீப் ரெட்டி வங்காவின் பதில் இதோ! | கமல், ரஜினி இணையும் படம்: டிசம்பர் 12ல் அறிவிக்கப்படுமா? | எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை: ராஜமவுலி பேச்சால் புது சர்ச்சை | கதைநாயகன் ஆனார் மொட்டை ராஜேந்திரன்: தனது பிடிவாதத்தை தளர்ப்பாரா? | எங்கள் மண வாழ்க்கை ரகசியம் - 'சரிம்மா, சாரிம்மா': நடிகை ரோஜா | ஆஸ்கருக்கு செல்லும் 2 தமிழ் படங்கள் | 8 வருடங்களுக்கு பிறகு தமிழ் திரையில் ருஹானி சர்மா | தேர்தல் கமிஷன் தூதர் பதவியில் இருந்து நீது சந்திரா நீக்கம் | பிளாஷ்பேக்: பாலச்சந்திரமேனன் இயக்கிய தமிழ் படம் | பிளாஷ்பேக்: நிலவொளியில் ஒளிப்பதிவு செய்த முதல் ஒளிப்பதிவாளர் |

சின்னத்திரை தொடர்களில் சப்போர்ட்டிங் ரோலில் நடித்து வந்த வைஷ்ணவி அருள்மொழி புதிய சீரியல் ஒன்றில் ஹீரோயினாக நடிக்கவுள்ளார். கலர்ஸ் தமிழின் 'மலர்' தொடரின் மூலம் நடிகையாக என்ட்ரி கொடுத்தவர் வைஷ்ணவி அருள்மொழி. தொடர்ந்து சின்னத்திரையில் பல ஹிட் தொடர்களில் முக்கிய வேடத்தில் நடித்து வந்த அவர் சின்னத்திரை ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளார்.
தற்போது விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஜீ தமிழின் புதிய சீரியல் ஒன்றில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு வைஷ்ணவிக்கு கிடைத்துள்ளது. மிக விரைவில் வெளியாகவுள்ள அந்த தொடரில் ராஜாமகள் புகழ் விஜய் ஹீரோவாகவும், வைஷ்ணவி அருள்மொழி ஹீரோயினாகவும் நடிக்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த செய்தி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஜீ தமிழ் தொலைக்காட்சி விரைவில் வெளியிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.