நீங்க எனக்கு இன்ஸ்பிரேசன் : சிம்ரனை பாராட்டிய திரிஷா | இதுவே உங்கள் மகளாக இருந்தால் என்ன செய்வீர்கள் ? மம்முட்டியிடம் கேள்வி எழுப்பிய பெண் தயாரிப்பாளர் | இதைவிட பெருமை என்ன இருக்கு : முதல்வர் சந்திப்பு குறித்து நடிகை எம்.என்.ராஜம் நெகிழ்ச்சி | தனுஷின் சகோதரிகளை இன்ஸ்டாகிராமில் பின்தொடரும் மிருணாள் தாக்கூர் | 'புஷ்பா 2' தியேட்டர் நெரிசல் விவகாரம்: மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் | தலைவன் தலைவி சக்சஸ் மீட் எப்போது | இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு வரும் அனுஷ்கா | முருகதாஸ், சிவகார்த்திகேயன் இரண்டு பேருக்கும் மதராஸி முக்கியம் | 'த காலர்' பிரிட்டிஷ் படத்தின் காப்பியா 'ஹவுஸ்மேட்ஸ்'? | 'ஐமேக்ஸ்' ரிலீஸ் இல்லாத 'கூலி': ரசிகர்கள் வருத்தம் |
காதலித்து, திருமணம் செய்து 4 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த சமந்தா - நாகசைதன்யா ஜோடி சமீபத்தில் பிரிவதாக அறிவித்தனர். இது திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இவர்களின் பிரிவுக்கு பல வகையான காரணங்கள் சமூகவலைதளங்களில் றெக்க கட்டி பறந்து கொண்டிருக்கின்றன. அவற்றுக்கு நேரடியாக இதுவரை பதில் கொடுக்காமல் இருந்து வந்தார் சமந்தா.
இந்நிலையில் நேற்று தனது திருமணநாளில் சோகமான பதிவை பதிவிட்ட சமந்தா இன்று இன்ஸ்டாவின் ஸ்டோரி பக்கத்தில் சில வதந்திகளுக்கு பதில் கொடுத்துள்ளார். அதில், ‛‛தனிப்பட்ட நெருக்கடியில் உங்களின் உணர்ச்சிகள் என்னை மூழ்கடித்துள்ளது. என் மீது இறக்கம் காட்டிய அனைவருக்கும் நன்றி. அதேவேளையில் நான் ஒருவருடன் தொடர்பில் இருந்தேன், சந்தர்ப்பவாதி, குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பவில்லை, கருகலைப்பு செய்தேன் என்று என்னைப்பற்றி பொய்யான வதந்திகள் பகிரப்பட்டு வருகின்றன.
விவாகரத்து என்பதே மிகவும் வேதனையான ஒன்று. அதிலிருந்து நான் மீண்டு வர வெகுநாட்கள் ஆகும். இதுஒருபுறம் இருந்தாலும் தனிப்பட்ட முறையில் என் மீதான தாக்குதல்கள் இடைவிடாது தொடருகின்றன. இதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்.
இவ்வாறு சமந்தா பதிவிட்டுள்ளார்.