'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
காதலித்து, திருமணம் செய்து 4 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த சமந்தா - நாகசைதன்யா ஜோடி சமீபத்தில் பிரிவதாக அறிவித்தனர். இது திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இவர்களின் பிரிவுக்கு பல வகையான காரணங்கள் சமூகவலைதளங்களில் றெக்க கட்டி பறந்து கொண்டிருக்கின்றன. அவற்றுக்கு நேரடியாக இதுவரை பதில் கொடுக்காமல் இருந்து வந்தார் சமந்தா.
இந்நிலையில் நேற்று தனது திருமணநாளில் சோகமான பதிவை பதிவிட்ட சமந்தா இன்று இன்ஸ்டாவின் ஸ்டோரி பக்கத்தில் சில வதந்திகளுக்கு பதில் கொடுத்துள்ளார். அதில், ‛‛தனிப்பட்ட நெருக்கடியில் உங்களின் உணர்ச்சிகள் என்னை மூழ்கடித்துள்ளது. என் மீது இறக்கம் காட்டிய அனைவருக்கும் நன்றி. அதேவேளையில் நான் ஒருவருடன் தொடர்பில் இருந்தேன், சந்தர்ப்பவாதி, குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பவில்லை, கருகலைப்பு செய்தேன் என்று என்னைப்பற்றி பொய்யான வதந்திகள் பகிரப்பட்டு வருகின்றன.
விவாகரத்து என்பதே மிகவும் வேதனையான ஒன்று. அதிலிருந்து நான் மீண்டு வர வெகுநாட்கள் ஆகும். இதுஒருபுறம் இருந்தாலும் தனிப்பட்ட முறையில் என் மீதான தாக்குதல்கள் இடைவிடாது தொடருகின்றன. இதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்.
இவ்வாறு சமந்தா பதிவிட்டுள்ளார்.