சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

தற்போது ராதே ஷ்யாம் படத்தை முடித்துள்ள பிரபாஸ், சலார், ஆதி புருஷ் படங்களில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கும் தனது 25ஆவது படம் மற்றும் நாக் அஸ்வின் இயக்கும் படத்திலும் கையெழுத்திட்டுள்ளார்.
இந்தநிலையில் இந்த படங்களைத் தொடர்ந்து இன்னும் இரண்டு மெகா படங்களில் நடிப்பதற்கு பிரபாஸ் ஒப்பந்தம் போட்டிருப்பதாக இன்னொரு தகவலும் வெளியாகியுள்ளது. அந்த வகையில், சலார் படத்தை அடுத்த மீண்டும் பிரசாந்த் நீல் இயக்கும் படத்தில் நடிக்கிறார். அதோடு, சித்தார்த் ஆனந்த் இயக்கும் இன்னொரு படத்திலும் நடிக்கப்போகிறார். இந்த இரண்டு படங்கள் குறித்த தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாக உள்ளன.