தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா 2' திரைப்படம் கடந்த வருடம் வெளிவந்தது. ஹைதராபாத்தில் சந்தியா தியேட்டரில் நடைபெற்ற பிரிமியர் காட்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ரேவதி என்ற பெண் இறந்தார். அவரது 9 வயது மகன் ஸ்ரீதேஜ் கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயமடைந்து மருத்துவமனையில் சில மாதங்கள் சிகிச்சை பெற்று பின் வீடு திரும்பினான். இந்த விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜுனும் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். தியேட்டர் நிர்வாகத்தினர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து தெலங்கானா மாநில முதன்மைச் செயலாளருக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது.
“படத்தின் பிரிமியர் காட்சிக்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. அனுமதியின்றி நடிகரும், பார்வையாளர்களும் எப்படி கலந்து கொண்டனர். முறையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தால் கூட்ட நெரிசலை தவிர்த்திருக்கலாம். விசாரணை முழுமையாகவும், பாரபட்சமின்றியும் நடத்தப்பட வேண்டும். இறந்து ரேவதி குடும்பத்திற்கு 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டியதன் காரணம் என்ன ?. ஆறு வாரங்களுக்குள் இது குறித்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்,” என்றும் உத்தரவிட்டுள்ளார்கள்.
இறந்த ரேவதி குடும்பத்திற்கு அல்லு அர்ஜுன் தரப்பில் 1 கோடி ரூபாயும், இயக்குனர் சுகுமார் தரப்பில் 50 லட்ச ரூபாயும், தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் 50 லட்ச ரூபாயும் நிதியுதவி அளித்துள்ளார்கள்.