ரஜினி, அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சம்பளத்துக்கு கட்டுப்பாடு? தயாரிப்பாளர் சங்கம் அதிரடி | சைபர் கிரைம் போலீஸில் அனுபமா பரமேஸ்வரன் புகார் | சம்பளத்தை உயர்த்திய நடிகர் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி | தந்தை நடிகரின் மிரட்டலால் ஓட்டம் பிடித்த நடிகை | 'ஜனநாயகன்' படத்திற்குக் கடும் சவாலாக இருக்கும் 'ராஜா சாப்' | தெலுங்கு லிரிக் வீடியோவில் புதிய சாதனை படைத்த ஏஆர் ரஹ்மானின் 'பெத்தி' | முந்தைய சாதனையை முறியடிக்குமா விஜய் - அனிருத் கூட்டணி? | இரண்டு கைகளிலும் கடிகாரம் அணிவது ஏன் ? ; அபிஷேக் பச்சனின் அடடே விளக்கம் | ‛ப்ரோ கோட்' டைட்டில் விவகாரம் ; ரவி மோகன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு | நவம்பர் இறுதியில் ரீ ரிலீஸ் ஆகும் மகேஷ்பாபுவின் பிசினஸ்மேன் |

அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா 2' திரைப்படம் கடந்த வருடம் வெளிவந்தது. ஹைதராபாத்தில் சந்தியா தியேட்டரில் நடைபெற்ற பிரிமியர் காட்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ரேவதி என்ற பெண் இறந்தார். அவரது 9 வயது மகன் ஸ்ரீதேஜ் கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயமடைந்து மருத்துவமனையில் சில மாதங்கள் சிகிச்சை பெற்று பின் வீடு திரும்பினான். இந்த விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜுனும் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். தியேட்டர் நிர்வாகத்தினர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து தெலங்கானா மாநில முதன்மைச் செயலாளருக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது.
“படத்தின் பிரிமியர் காட்சிக்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. அனுமதியின்றி நடிகரும், பார்வையாளர்களும் எப்படி கலந்து கொண்டனர். முறையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தால் கூட்ட நெரிசலை தவிர்த்திருக்கலாம். விசாரணை முழுமையாகவும், பாரபட்சமின்றியும் நடத்தப்பட வேண்டும். இறந்து ரேவதி குடும்பத்திற்கு 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டியதன் காரணம் என்ன ?. ஆறு வாரங்களுக்குள் இது குறித்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்,” என்றும் உத்தரவிட்டுள்ளார்கள்.
இறந்த ரேவதி குடும்பத்திற்கு அல்லு அர்ஜுன் தரப்பில் 1 கோடி ரூபாயும், இயக்குனர் சுகுமார் தரப்பில் 50 லட்ச ரூபாயும், தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் 50 லட்ச ரூபாயும் நிதியுதவி அளித்துள்ளார்கள்.