ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா 2' திரைப்படம் கடந்த வருடம் வெளிவந்தது. ஹைதராபாத்தில் சந்தியா தியேட்டரில் நடைபெற்ற பிரிமியர் காட்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ரேவதி என்ற பெண் இறந்தார். அவரது 9 வயது மகன் ஸ்ரீதேஜ் கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயமடைந்து மருத்துவமனையில் சில மாதங்கள் சிகிச்சை பெற்று பின் வீடு திரும்பினான். இந்த விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜுனும் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். தியேட்டர் நிர்வாகத்தினர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து தெலங்கானா மாநில முதன்மைச் செயலாளருக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது.
“படத்தின் பிரிமியர் காட்சிக்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. அனுமதியின்றி நடிகரும், பார்வையாளர்களும் எப்படி கலந்து கொண்டனர். முறையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தால் கூட்ட நெரிசலை தவிர்த்திருக்கலாம். விசாரணை முழுமையாகவும், பாரபட்சமின்றியும் நடத்தப்பட வேண்டும். இறந்து ரேவதி குடும்பத்திற்கு 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டியதன் காரணம் என்ன ?. ஆறு வாரங்களுக்குள் இது குறித்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்,” என்றும் உத்தரவிட்டுள்ளார்கள்.
இறந்த ரேவதி குடும்பத்திற்கு அல்லு அர்ஜுன் தரப்பில் 1 கோடி ரூபாயும், இயக்குனர் சுகுமார் தரப்பில் 50 லட்ச ரூபாயும், தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் 50 லட்ச ரூபாயும் நிதியுதவி அளித்துள்ளார்கள்.