பிரமானந்தம் - யோகிபாபு சந்திப்பு ஏன்? | ஆந்திரா மதுபான ஊழல் ; விசாரணை வளையத்தில் நடிகை தமன்னா : கோலிவுட் போல் டோலிவுட்டும் கலக்கம் | 3 மணி நேரம் ஓடப் போகும் 'வார் 2' | வாழ்க்கை என்பது ஒரு வட்டம் ; ராஷி கண்ணாவின் புதிய மகிழ்ச்சி | ஸ்வேதா மேனன் மீது எப்ஐஆர் பதிவு ; நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட விடாமல் தடுக்கும் முயற்சியா? | நீங்க எனக்கு இன்ஸ்பிரேசன் : சிம்ரனை பாராட்டிய திரிஷா | இதுவே உங்கள் மகளாக இருந்தால் என்ன செய்வீர்கள் ? மம்முட்டியிடம் கேள்வி எழுப்பிய பெண் தயாரிப்பாளர் | இதைவிட பெருமை என்ன இருக்கு : முதல்வர் சந்திப்பு குறித்து நடிகை எம்.என்.ராஜம் நெகிழ்ச்சி | தனுஷின் சகோதரிகளை இன்ஸ்டாகிராமில் பின்தொடரும் மிருணாள் தாக்கூர் | 'புஷ்பா 2' தியேட்டர் நெரிசல் விவகாரம்: மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் |
அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா 2' திரைப்படம் கடந்த வருடம் வெளிவந்தது. ஹைதராபாத்தில் சந்தியா தியேட்டரில் நடைபெற்ற பிரிமியர் காட்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ரேவதி என்ற பெண் இறந்தார். அவரது 9 வயது மகன் ஸ்ரீதேஜ் கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயமடைந்து மருத்துவமனையில் சில மாதங்கள் சிகிச்சை பெற்று பின் வீடு திரும்பினான். இந்த விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜுனும் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். தியேட்டர் நிர்வாகத்தினர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து தெலங்கானா மாநில முதன்மைச் செயலாளருக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது.
“படத்தின் பிரிமியர் காட்சிக்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. அனுமதியின்றி நடிகரும், பார்வையாளர்களும் எப்படி கலந்து கொண்டனர். முறையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தால் கூட்ட நெரிசலை தவிர்த்திருக்கலாம். விசாரணை முழுமையாகவும், பாரபட்சமின்றியும் நடத்தப்பட வேண்டும். இறந்து ரேவதி குடும்பத்திற்கு 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டியதன் காரணம் என்ன ?. ஆறு வாரங்களுக்குள் இது குறித்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்,” என்றும் உத்தரவிட்டுள்ளார்கள்.
இறந்த ரேவதி குடும்பத்திற்கு அல்லு அர்ஜுன் தரப்பில் 1 கோடி ரூபாயும், இயக்குனர் சுகுமார் தரப்பில் 50 லட்ச ரூபாயும், தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் 50 லட்ச ரூபாயும் நிதியுதவி அளித்துள்ளார்கள்.