கவினுக்கு ஜோடியான பிரியங்கா மோகன் | தெலுங்கு படத்தில் விலைமாதுவாக நடிக்கும் கயாடு லோஹர் | பிரேமலு ஹீரோவின் புதிய படப்பிடிப்பை துவங்கி வைத்த பஹத் பாசில் | கூலி ரிலீஸ் தேதி கவுன்ட் டவுன் போஸ்டர் வெளியானது | “என் உயிருக்கு ஏதாவது ஆனால்...” : நடிகர் பாலாவின் 3-வது மனைவி மருத்துவமனையில் அனுமதி | அடுத்த ஆண்டு துவக்கத்தில் விக்ரமை இயக்கும் பிரேம்குமார் | நடிகை கியாரா அத்வானிக்கு பெண் குழந்தை பிறந்தது | 'குட் பேட் அக்லி' வெளியாகி மூன்று மாதங்கள் : இன்னும் வராத அஜித்தின் அடுத்த பட அறிவிப்பு | 3 நாட்கள் தியேட்டர் வளாகத்திற்குள் ‛நோ' விமர்சனம் : விஷால் வேண்டுகோள் | ரூ.6 கோடியை திருப்பி கேட்கும் தயாரிப்பு நிறுவனம் : பதிலுக்கு ரூ.9 கோடி நஷ்ட ஈடு கேட்கிறார் ரவி மோகன் |
கடந்த டிசம்பரில் தெலுங்கானாவில் உள்ள தியேட்டரில் அதிகாலை ஸ்பெஷல் காட்சி திரையிடப்பட்டது. அங்கு ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்க்க வந்திருந்த நடிகர் அல்லு அர்ஜூனை பார்க்க பெருமளவு கூட்டம் கூடியது. இதில் ரேவதி என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். இந்த வழக்கில் ஐதராபாத் போலீசார், அல்லு அர்ஜூனை கைது செய்தனர். பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்த விவகாரம் பெரிதும் பேசப்பட்டது.
திரைப்பட டிக்கெட் விலை உயர்வு மற்றும் சிறப்பு காட்சிகளுக்கான அனுமதி தொடர்பாக தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை விசாரித்த நீதிபதி விஜய்சென் ரெட்டி, 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை காலை 11 மணிக்கு முன்பாகவோ இரவு 11 மணிக்கு பிறகோ தியேட்டருக்குள் அனுமதிக்கக் கூடாது என தியேட்டர்களுக்கும், தெலுங்கானா மாநில அரசுக்கும் உத்தரவிட்டார். அதிகாலை மற்றும் நள்ளிரவில் படம் பார்ப்பது மனதளவில் குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என நீதிபதி விஜய்சென் ரெட்டி கருத்து தெரிவித்ததுடன், வழக்கை பிப்.,22க்கு ஒத்திவைத்தார்.