தமிழ் சினிமாவில் இறங்கு முகமான ஓடிடி வியாபாரம் | ஜீவன் இல்லாத கதாபாத்திரங்களை தவிர்க்கிறேன்: பவ்யா திரிகா | வாட்ஸ்-அப்பில் வந்த லிங்க்கால் ஹேக் ஆன போன் : அபிஷேக் எச்சரிக்கை | கிங் படப்பிடிப்பில் ஷாரூக்கான் காயம் | ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது : தமன்னாவின் தத்துவப் பதிவு | ஸ்டன்ட் நடிகர் உயிரிழப்பு எதிரொலி : அக்ஷய்குமார் செய்த அருமையான செயல் | ஜூலை 22ல் கூலி படத்தின் மூன்றாவது பாடல் ரிலீஸ் | அடுத்த நல்ல வசூலுக்கு 80 நாட்களாகக் காத்திருக்கும் தமிழ் சினிமா | அடுத்து அஜித் படமா... : ஆதிக்ரவிச்சந்திரன் பதில் | டாப் 10… முதல் இரண்டு இடங்களில் 'குபேரா' |
கடந்த டிசம்பரில் தெலுங்கானாவில் உள்ள தியேட்டரில் அதிகாலை ஸ்பெஷல் காட்சி திரையிடப்பட்டது. அங்கு ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்க்க வந்திருந்த நடிகர் அல்லு அர்ஜூனை பார்க்க பெருமளவு கூட்டம் கூடியது. இதில் ரேவதி என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். இந்த வழக்கில் ஐதராபாத் போலீசார், அல்லு அர்ஜூனை கைது செய்தனர். பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்த விவகாரம் பெரிதும் பேசப்பட்டது.
திரைப்பட டிக்கெட் விலை உயர்வு மற்றும் சிறப்பு காட்சிகளுக்கான அனுமதி தொடர்பாக தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை விசாரித்த நீதிபதி விஜய்சென் ரெட்டி, 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை காலை 11 மணிக்கு முன்பாகவோ இரவு 11 மணிக்கு பிறகோ தியேட்டருக்குள் அனுமதிக்கக் கூடாது என தியேட்டர்களுக்கும், தெலுங்கானா மாநில அரசுக்கும் உத்தரவிட்டார். அதிகாலை மற்றும் நள்ளிரவில் படம் பார்ப்பது மனதளவில் குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என நீதிபதி விஜய்சென் ரெட்டி கருத்து தெரிவித்ததுடன், வழக்கை பிப்.,22க்கு ஒத்திவைத்தார்.