அன்னை இல்லத்தில் எனக்கு எந்த உரிமையும் இல்லை: ராம்குமார் பிரமாண மனு தாக்கல் | பாவனா தயாரிக்கும் படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகும் அனிமல் பட இசையமைப்பாளர் | போதை வழக்கில் முன்ஜாமின் கோரிய மனுவை வாபஸ் பெற்ற மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் | 'ஆலப்புழா ஜிம்கானா' படக்குழுவினரை பாராட்டிய சிவகார்த்திகேயன் | மே 9ல் ரிலீஸ் ஆகும் திலீப்பின் 150வது படம் | ஓடிடி.,க்கு அதிக விலைக்கு போன டாப் தமிழ் படங்கள் | 20 ஆண்டுகளாக தோழிகளாக வலம்வரும் திரிஷா - சார்மி! | 'குபேரா' படத்தின் புதிய அப்டேட்! | அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! |
அசோக்குமார், யாஷிகா ஆனந்த் நடித்த பெஸ்டி படத்தை சாரதிராஜா தயாரிக்க, ரங்கை, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். இயக்குனர் கூறியதாவது:
இளமை துள்ளலுடன், திகிலும், மர்மமும் நிறைந்த படமாக உருவாக்கியுள்ளேன். படப்பிடிப்பு முடிந்த பின் யாஷிகா விபத்தில் சிக்கினார். இதில் கிளாமரில் மட்டுமல்லாது நடிப்பிலும் அவர் அசத்தியுள்ளார். இப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஆனந்த், டொராண்டோ தமிழ் இண்டர்நேஷனல் திரைப்பட விழாவில் சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதினை பெற்றார். அமெரிக்காவில் நடந்த லாஸ் விகாஸ் திரைப்பட விழாவில் யாஷிகா ஆனந்துக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது. கொல்கத்தாவில் நடந்த விர்ஜின் ஸ்பிரிங்' திரைப்பட விழாவில் அசோக்குக்கு சிறந்த நடிகருக்கான விருதும், கதை சொல்லல், திரைக்கதை அமைத்தல், இயக்கம் என ‛பெஸ்டி' படத்தை எழுதி இயக்கிய எனக்கு மூன்று விருதுகள் கிடைத்தன. மேலும் பல விழாக்களில் திரையிட ஏற்பாடு செய்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.