ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அசோக்குமார், யாஷிகா ஆனந்த் நடித்த பெஸ்டி படத்தை சாரதிராஜா தயாரிக்க, ரங்கை, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். இயக்குனர் கூறியதாவது:
இளமை துள்ளலுடன், திகிலும், மர்மமும் நிறைந்த படமாக உருவாக்கியுள்ளேன். படப்பிடிப்பு முடிந்த பின் யாஷிகா விபத்தில் சிக்கினார். இதில் கிளாமரில் மட்டுமல்லாது நடிப்பிலும் அவர் அசத்தியுள்ளார். இப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஆனந்த், டொராண்டோ தமிழ் இண்டர்நேஷனல் திரைப்பட விழாவில் சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதினை பெற்றார். அமெரிக்காவில் நடந்த லாஸ் விகாஸ் திரைப்பட விழாவில் யாஷிகா ஆனந்துக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது. கொல்கத்தாவில் நடந்த விர்ஜின் ஸ்பிரிங்' திரைப்பட விழாவில் அசோக்குக்கு சிறந்த நடிகருக்கான விருதும், கதை சொல்லல், திரைக்கதை அமைத்தல், இயக்கம் என ‛பெஸ்டி' படத்தை எழுதி இயக்கிய எனக்கு மூன்று விருதுகள் கிடைத்தன. மேலும் பல விழாக்களில் திரையிட ஏற்பாடு செய்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.