நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
சிம்புவை வைத்து மாநாடு படத்தை இயக்கி உள்ள வெங்கட்பிரபு, அந்தப்படத்தின் இறுதிக்கட்ட பணிகளை கவனித்து வருகிறார். இதையடுத்து அவர் யாருடைய படத்தை இயக்கவுள்ளார் என்கிற கேள்வி எழுந்த நிலையில், நடிகர் கிச்சா சுதீப்பை வைத்து படம் இயக்கப்போவதாக தகவல்கள் வெளியாகின. இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படமும் சுதீப்பிற்கு வெங்கட்பிரபு கோரிய பிறந்தநாள் வாழ்த்தும் அதை உறுதி செய்வது போல இருந்தன.
ஆனால் அவரது அடுத்த படத்தில் பிரபுதேவாவையும், அரவிந்தசாமியையும் கூட்டணி சேர்த்து படம் இயக்க உள்ளாராம் வெங்கட் பிரபு. அந்தவகையில் மின்சார கனவு படத்தை அடுத்து, கிட்டத்தட்ட 25 வருடங்கள் கழித்து மீண்டும் பிரபுதேவா - அரவிந்தசாமி இருவரும் இணைந்து நடிக்கும் படமாக இது இருக்கும்.
அதேசமயம் இந்தப்படத்தில் வில்லனாக கிச்சா சுதீப்பை நடிக்க வைக்கவும் முயற்சி செய்து வருகிறாராம். அப்படி கதை சொல்ல சென்ற சமயத்தில், சுதீப்புடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சோஷியல் மீடியாவில் வெளியிட்டதுடன் அவரது விருந்தோம்பல் குறித்தும் சிலாகித்து கூறியிருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது.