ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
சிம்புவை வைத்து மாநாடு படத்தை இயக்கி உள்ள வெங்கட்பிரபு, அந்தப்படத்தின் இறுதிக்கட்ட பணிகளை கவனித்து வருகிறார். இதையடுத்து அவர் யாருடைய படத்தை இயக்கவுள்ளார் என்கிற கேள்வி எழுந்த நிலையில், நடிகர் கிச்சா சுதீப்பை வைத்து படம் இயக்கப்போவதாக தகவல்கள் வெளியாகின. இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படமும் சுதீப்பிற்கு வெங்கட்பிரபு கோரிய பிறந்தநாள் வாழ்த்தும் அதை உறுதி செய்வது போல இருந்தன.
ஆனால் அவரது அடுத்த படத்தில் பிரபுதேவாவையும், அரவிந்தசாமியையும் கூட்டணி சேர்த்து படம் இயக்க உள்ளாராம் வெங்கட் பிரபு. அந்தவகையில் மின்சார கனவு படத்தை அடுத்து, கிட்டத்தட்ட 25 வருடங்கள் கழித்து மீண்டும் பிரபுதேவா - அரவிந்தசாமி இருவரும் இணைந்து நடிக்கும் படமாக இது இருக்கும்.
அதேசமயம் இந்தப்படத்தில் வில்லனாக கிச்சா சுதீப்பை நடிக்க வைக்கவும் முயற்சி செய்து வருகிறாராம். அப்படி கதை சொல்ல சென்ற சமயத்தில், சுதீப்புடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சோஷியல் மீடியாவில் வெளியிட்டதுடன் அவரது விருந்தோம்பல் குறித்தும் சிலாகித்து கூறியிருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது.