‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
விக்ரமும், அவரது மகன் துருவ்வும் இணைந்து நடிக்கும் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். இந்த படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. இதன் முதல்கட்ட படப்பிடிப்புகள் சென்னையில் நடந்தது. இரண்டாவது கட்ட படப்பிடிப்பை டார்ஜிலிங் பகுதியில் நடத்த திட்டமிட்டிருந்தனர்.
இதற்காக துருவ் உள்ளிட்ட படப்பிடிப்பு குழுவினர் 90 பேர் சென்னையில் இருந்து விமானத்தில் டார்ஜிலிங் புறப்பட்டு சென்றனர். விமானம் புறப்பட்ட 55வது நிமிடத்தில் அது கடல் மீது பறந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டது. விமானத்தில் அதிர்வு உண்டானது.
இதனால் பயணிகள் அனைவரும் பயந்தனர். விமானம் தொடர்ந்து பறக்க முடியாத நிலை ஏற்பட்டதால் விமானிகள் துரிதமாக செயல்பட்டு விமானத்தை மீண்டும் சென்னைக்கே திருப்பினார்கள். இதனால் அனைவரும் பத்திரமாக சென்னை வந்து சேர்ந்தனர். அதன்பிறகு மறுநாள் இன்னொரு விமானத்தில் படக் குழுவினர் டார்ஜிலிங் சென்று சேர்ந்தனர்.