நடிகை ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரன்ட் நாளை மூடப்படுகிறது! | சமந்தா வெளியிட்ட துபாய் பேஷன் ஷோ வீடியோவில் தெரிந்த ஆணின் கை! | வீர தீர சூரன்- 2 படத்திற்கு பிறகு மூன்று படங்களில் கமிட்டான விக்ரம்! | ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது புத்திசாலித்தனம்! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | 6 வருடங்களில் 6 படம்: ஷிவாத்மிகாவுக்கு கை கொடுக்குமா 'பாம்' | தமிழ் ஆல்பத்தில் கொரியன் பாடகர் | அடுத்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'கூலி' | பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன் | பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ் | 'குடும்பம் ஒரு கதம்பம்' புகழ் குரியகோஸ் ரங்கா காலமானார் : யார் இவர்... சின்ன ரீ-வைண்ட்! |
விஜய் நடித்த பிகில் படம் சமீபத்தில் வெளிவந்தது. ஆனால் கல்லூரி காலத்தில் நான் தான் பிகில் என்கிறார் சூர்யா. லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் முன்னாள் மாணவர் என்கிற முறையில் நடிகர் சூர்யா கலந்து கொண்டார்.
அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: இந்த நிகழ்ச்சி மூலம் என் கல்லூரி நண்பர்களை மீண்டும் ஒரே இடத்தில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. எனது கல்லூரி கால இனிமையான நினைவுகள் மனதுக்குள் ஓடிக் கொண்டிருக்கிறது. கல்லூரி காலத்தில் எனக்கு பாடத் தெரியாது. ஆனால் பாடல்களை விசில் மூலம் வெளிப்படுத்துவேன். கல்லூரி விழாக்களில் எனது விசில் தான் சத்தமாக கேட்கும். அதனால் எல்லோரும் என்னை பிகில் என்று பட்டப்பெயர் சொல்லி அழைப்பார்கள். அப்படி அழைத்த பலர் இங்கே இருக்கிறார்கள். என்றார்.