‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

விஜய் நடித்த பிகில் படம் சமீபத்தில் வெளிவந்தது. ஆனால் கல்லூரி காலத்தில் நான் தான் பிகில் என்கிறார் சூர்யா. லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் முன்னாள் மாணவர் என்கிற முறையில் நடிகர் சூர்யா கலந்து கொண்டார்.
அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: இந்த நிகழ்ச்சி மூலம் என் கல்லூரி நண்பர்களை மீண்டும் ஒரே இடத்தில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. எனது கல்லூரி கால இனிமையான நினைவுகள் மனதுக்குள் ஓடிக் கொண்டிருக்கிறது. கல்லூரி காலத்தில் எனக்கு பாடத் தெரியாது. ஆனால் பாடல்களை விசில் மூலம் வெளிப்படுத்துவேன். கல்லூரி விழாக்களில் எனது விசில் தான் சத்தமாக கேட்கும். அதனால் எல்லோரும் என்னை பிகில் என்று பட்டப்பெயர் சொல்லி அழைப்பார்கள். அப்படி அழைத்த பலர் இங்கே இருக்கிறார்கள். என்றார்.




