தெலுங்கில் அறிமுகமாகும் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா! | ஓவியாவை அசிங்கமாக விமர்சிக்கும் விஜய் ரசிகர்கள் | ஜெயிலர் -2வில் நடிக்க அழைப்பு வருமா? தமன்னா எதிர்பார்ப்பு | தெலுங்கு புரமோஷனில் கன்னடத்தில் பேசி விமர்சனங்களில் சிக்கிய ரிஷப் ஷெட்டி! | 250 கோடி வசூலைக் கடந்த பவன் கல்யாணின் 'ஓஜி' | அக்டோபர் 9ம் தேதி ஓடிடியில் வெளியாகும் வார்-2! | ப்ரீ புக்கிங் - தனுஷின் இட்லி கடை எத்தனை கோடி வசூலித்துள்ளது? | அல்லு அர்ஜுனை ஆட்டுவித்த ஜப்பான் நடன இயக்குனர் | சினிமாவுக்கு மகன் வருவாரா அஜித் சொன்ன பதில் | 2வது படத்திலேயே அம்மாவாக நடிப்பது தவறா? தர்ஷனா கேள்வி |
விஜய்சேதுபதி நடித்துள்ள துக்ளக் தர்பார் படம் சின்னத்திரையிலும், ஓடிடியிலும் வெளியாவதாக வந்த தகவலை தொடர்ந்து மேலும் ஒரு படம் ஓடிடியில் வெளியாவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இயக்குனர் சுந்தர்ராஜனின் மகன் தீபக் சுந்தர்ராஜன் இயக்கும் படத்தில் விஜய்சேதுபதி நடித்து முடித்துள்ளார். இதில் அவருடன் டாப்ஸி, ராதிகா சரத்குமார், தேவதர்ஷினி யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
கொரோனாவின் முதல் அலை முடிந்திருந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி ஒரே கட்டமாக முடிக்கப்பட்டு விட்டது. படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. படம் பற்றி எந்த அப்டேட்டும் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் படம் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
படத்தில் டாப்ஸி நடித்திருப்பதால் படத்தை இந்தியில் வெளியிடவும் ஏற்பாடு நடப்பதாக கூறப்படுகிறது. இதுபற்றிய முறையான அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளிவர இருக்கிறது.