பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

விஜய்சேதுபதி நடித்துள்ள துக்ளக் தர்பார் படம் சின்னத்திரையிலும், ஓடிடியிலும் வெளியாவதாக வந்த தகவலை தொடர்ந்து மேலும் ஒரு படம் ஓடிடியில் வெளியாவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இயக்குனர் சுந்தர்ராஜனின் மகன் தீபக் சுந்தர்ராஜன் இயக்கும் படத்தில் விஜய்சேதுபதி நடித்து முடித்துள்ளார். இதில் அவருடன் டாப்ஸி, ராதிகா சரத்குமார், தேவதர்ஷினி யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
கொரோனாவின் முதல் அலை முடிந்திருந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி ஒரே கட்டமாக முடிக்கப்பட்டு விட்டது. படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. படம் பற்றி எந்த அப்டேட்டும் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் படம் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
படத்தில் டாப்ஸி நடித்திருப்பதால் படத்தை இந்தியில் வெளியிடவும் ஏற்பாடு நடப்பதாக கூறப்படுகிறது. இதுபற்றிய முறையான அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளிவர இருக்கிறது.