ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி அர்ச்சனா. திரைப்படங்களில் நடித்தும் வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மூளைக்கு அருகே ஏற்பட்ட நீர் கசிவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் ஆபரேஷன் முடிந்து பூரண நலத்துடன் வீடு திரும்பி உள்ளார்.
இது தொடர்பாக அர்ச்சனா கூறுகையில், அர்ச்சனா எப்படி இருக்காங்கன்னு எல்லாரும் கேட்கிறாங்க. அர்ச்சனா ஒரு தொகுப்பாளினி தான் ஆனால் அவளுக்காக எல்லாரும் பிரார்த்தனை செய்தார்கள். அவர்களுக்கு எனது நன்றி. என்னை குணப்படுத்திய மருத்துவமனைக்கு நன்றி. கொரோனா பரிசோதனைக்காகத்தான் ஆஸ்பத்திரிக்கு போனேன். ஆனால் 24 மணி நேரத்தில் பல பரிசோதனைகள் செய்து மூளையில் இருக்கும் பிரச்சினையை கண்டுபிடித்தார்கள்.
வாழ்க்கையில் நாளை என்பதில்லை. இன்றைய வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதுதான் நான் உணர்ந்தது. யாரையும் வெறுக்காதீர்கள், எல்லோர் மீதும் அன்பு செலுத்துங்கள். கடவுளால் எல்லா இடத்திலும் இருக்க முடியாது. அதனால் தனது தூதர்களாக டாக்டர்களையும், செவிலி தாய்களையும் அவர் படைத்துள்ளார். இது இறைவன் எனக்கு கொடுத்த மறுஜென்மம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.