'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி அர்ச்சனா. திரைப்படங்களில் நடித்தும் வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மூளைக்கு அருகே ஏற்பட்ட நீர் கசிவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் ஆபரேஷன் முடிந்து பூரண நலத்துடன் வீடு திரும்பி உள்ளார்.
இது தொடர்பாக அர்ச்சனா கூறுகையில், அர்ச்சனா எப்படி இருக்காங்கன்னு எல்லாரும் கேட்கிறாங்க. அர்ச்சனா ஒரு தொகுப்பாளினி தான் ஆனால் அவளுக்காக எல்லாரும் பிரார்த்தனை செய்தார்கள். அவர்களுக்கு எனது நன்றி. என்னை குணப்படுத்திய மருத்துவமனைக்கு நன்றி. கொரோனா பரிசோதனைக்காகத்தான் ஆஸ்பத்திரிக்கு போனேன். ஆனால் 24 மணி நேரத்தில் பல பரிசோதனைகள் செய்து மூளையில் இருக்கும் பிரச்சினையை கண்டுபிடித்தார்கள்.
வாழ்க்கையில் நாளை என்பதில்லை. இன்றைய வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதுதான் நான் உணர்ந்தது. யாரையும் வெறுக்காதீர்கள், எல்லோர் மீதும் அன்பு செலுத்துங்கள். கடவுளால் எல்லா இடத்திலும் இருக்க முடியாது. அதனால் தனது தூதர்களாக டாக்டர்களையும், செவிலி தாய்களையும் அவர் படைத்துள்ளார். இது இறைவன் எனக்கு கொடுத்த மறுஜென்மம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.