மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி | நடப்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு |
விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி 2 சீரியலில் வில்லியாக நடித்தவர் அர்ச்சனா. அதே போல் பாரதி கண்ணம்மா சீரியலில் ஹீரோவாக நடித்தவர் அருண் பிரசாத். இவர்கள் இருவருமே பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர்கள். குறிப்பாக ,அர்ச்சனா பிக்பாஸ் நிகழ்ச்சி 7-வது சீசனில் வைல்டு கார்டு போட்டியாளராக நுழைந்து டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். அதேபோல் அருண் பிரசாத் பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். இந்த 8வது சீசனின்போது பிக்பாஸ் வீட்டுக்குள் அருண் பிரசாத்தின் உறவினராக சென்றார் அர்ச்சனா. அப்போது அவர்கள் தங்களை காதலை அறிவித்தார்கள். இந்நிலையில் தற்போது தங்களது நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருப்பதாக இணைய பக்கத்தில் ஒரு தகவல் வெளியிட்டுள்ளார் அருண் பிரசாத். என்றாலும் திருமணம் எப்போது நடைபெறும் என்பதை அவர் குறிப்பிடவில்லை.