22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
தமிழ் நாவல்களில் அதிகம் பேரால் படிக்கப்பட்ட, படிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சரித்திர நாவல் கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்'. புத்தகக் கண்காட்சிகளில் அதிகம் விற்பனையாகும் ஒரே நாவல் இதுதான் என்பதும் கூடுதல் தகவல். அந்த சரித்திர நாவலை இதற்கு முன் பலரும் திரைப்படமாக்க நினைத்து முயற்சிகள் தோல்வியில்தான் முடிவடைந்தது. அதை இயக்குனர் மணிரத்னம் மாற்றிக் காட்டியிருக்கிறார்.
'பொன்னியின் செல்வன்' என்ற நாவல் பெயரிலேயே இரண்டு பாகங்களாக இப்படம் திரைப்படமாகி வருகிறது. நேற்று இப்படத்தின் முதல் பாக வெளியீடு பற்றிய அறிவிப்பை வெளியிட்டார்கள். அந்த அறிவிப்பு போஸ்டர் முழுவதும் ஆங்கிலத்தில் தான் இருந்தது. அதே சமயம் படத்தின் பெயரில் 'பொன்னியின் செல்வன்' என்பது இரண்டாவது வரியிலும் 'பிஎஸ் - 1' என்பது முதல் வரியில் பெரிய எழுத்திலும் இடம் பெற்றிருந்தது.
அழகான 'பொன்னியின் செல்வன்' என்ற தலைப்பை தமிழில் ஒரு இடத்தில் கூட போஸ்டரில் இடம்பெறவில்லை என்பது பல வாசகர்களின் குறையாக இருக்கிறது.
'பாகுபலி' இயக்குனர் ராஜமவுலி தற்போது இயக்கிக் கொண்டு வரும் படத்தை 'ஆர்ஆர்ஆர்' என்றே அனைவரும் குறிப்பிடுகிறார்கள். ஆனால், அந்தப் படத்தின் முழு பெயரான 'இரத்தம் ரணம் ரௌத்திம்' என யாருமே குறிப்பிடுவதில்லை.
அந்த பார்முலாவிலேயே மணிரத்தினமும் 'பொன்னியின் செல்வன்' என்பதை 'பிஎஸ்' எனக் குறிப்பிடுகிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.