வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் |

சினிமாவில் பிசியாக நடித்து வந்தபோதே ராஜ்கிரணை வைத்து ப.பாண்டி என்ற படத்தை இயக்கி வெற்றி பெற்றார் தனுஷ். அதையடுத்து நாகார்ஜூனாவை வைத்து இன்னொரு படத்தை இயக்கும் பணிகளில் இறங்கியவர் அந்த படத்தை கிடப்பில் போட்டு விட்டார்.
இந்நிலையில் தற்போது கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என பல மொழிப்படங்களிலும் நடித்து மிகப்பெரிய நடிகராகி விட்டார். கடந்த மூன்று மாதங்களாக தி கிரேமேன் படத்திற்காக அமெரிக்காவில் முகாமிட்டு நடித்து வந்த தனுஷ், சமீபத்தில்தான் அந்த படத்தில் நடித்து முடித்தார். தான் நடித்து வெளியான கர்ணன் படத்தை கூட அவர் அமெரிக்காவில் உள்ள தியேட்டரில் தான் பார்த்தார்.
இப்படியான நிலையில் தனுஷ் மீண்டும் படம் இயக்குவது எப்போது? என்பது குறித்த ஒரு கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், தற்போது கார்த்திக் சுப்பராஜ், மாரி செல்வராஜ், கார்த்திக் நரேன், ராம் குமார் என பல திறமையான இயக்குனர்களின் படங்களில் நடிக்கிறேன். அவர்கள் சொன்ன கதைகள் எனை பெரிய அளவில் பாதித்து விட்டதால் அவர்களின் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் மட்டுமே அதிகரித்துள்ளது. அதனால் தான் மீண்டும் டைரக்சனில் எனக்கு ஆர்வம் ஏற்படவில்லை. இருப்பினும் இன்னும் மூன்று வருடங்கள் கழித்து மீண்டும் படம் இயக்குவது பற்றி யோசிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார் தனுஷ்.