விஜய் பாணியை பின்பற்றினால் நல்லது: 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜூ | விரைவில் 'லக்கி பாஸ்கர் 2': வெங்கி அட்லூரி அப்டேட் | கூலி திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாவதில் புதிய சிக்கல்? | காமெடி நடிகரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு 50 லட்சம் தர பிரபாஸ் வாக்குறுதி | படம் என்ன ஜானர் என்று ரிலீஸுக்கு முன்பே சொல்லிவிடுங்கள் ; சசிகுமார் வேண்டுகோள் | 'தொடரும்' கெட்டப்பில் புரோமோ வீடியோவுடன் பிக்பாஸ் சீசன் 7 அறிவிப்பை வெளியிட்ட மோகன்லால் | இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் மொத்தமாக நீக்கிய ரன்வீர் சிங் ; ரசிகர்கள் கவலை | சூர்யா பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் தெலுங்கு 'அயன்' | அசோக் செல்வன் புதிய பட அப்டேட்! | 'பையா' பட தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகிறது! |
சினிமாவில் பிசியாக நடித்து வந்தபோதே ராஜ்கிரணை வைத்து ப.பாண்டி என்ற படத்தை இயக்கி வெற்றி பெற்றார் தனுஷ். அதையடுத்து நாகார்ஜூனாவை வைத்து இன்னொரு படத்தை இயக்கும் பணிகளில் இறங்கியவர் அந்த படத்தை கிடப்பில் போட்டு விட்டார்.
இந்நிலையில் தற்போது கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என பல மொழிப்படங்களிலும் நடித்து மிகப்பெரிய நடிகராகி விட்டார். கடந்த மூன்று மாதங்களாக தி கிரேமேன் படத்திற்காக அமெரிக்காவில் முகாமிட்டு நடித்து வந்த தனுஷ், சமீபத்தில்தான் அந்த படத்தில் நடித்து முடித்தார். தான் நடித்து வெளியான கர்ணன் படத்தை கூட அவர் அமெரிக்காவில் உள்ள தியேட்டரில் தான் பார்த்தார்.
இப்படியான நிலையில் தனுஷ் மீண்டும் படம் இயக்குவது எப்போது? என்பது குறித்த ஒரு கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், தற்போது கார்த்திக் சுப்பராஜ், மாரி செல்வராஜ், கார்த்திக் நரேன், ராம் குமார் என பல திறமையான இயக்குனர்களின் படங்களில் நடிக்கிறேன். அவர்கள் சொன்ன கதைகள் எனை பெரிய அளவில் பாதித்து விட்டதால் அவர்களின் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் மட்டுமே அதிகரித்துள்ளது. அதனால் தான் மீண்டும் டைரக்சனில் எனக்கு ஆர்வம் ஏற்படவில்லை. இருப்பினும் இன்னும் மூன்று வருடங்கள் கழித்து மீண்டும் படம் இயக்குவது பற்றி யோசிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார் தனுஷ்.