'கண்ணப்பா' படத்தின் ஹார்ட் டிஸ்க் மாயம்?: பட ரிலீசுக்கு சிக்கலா? | 'கருடன்' போல வரவேற்பைப் பெறுமா : தெலுங்கு ரீமேக் 'பைரவம்' | பிளாஷ்பேக்: பாகங்களை மாற்றி திரையிட்டு, வேகமெடுத்த “மெல்லத் திறந்தது கதவு” | புதிய முயற்சியில் அமீர் கான் | அல்லு அர்ஜுன் - அட்லி பட டைட்டில்கள் என உலா வரும் பெயர்கள் | சிம்பு, தனுஷ் படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ்: மீண்டும் உருவாகும் போட்டி | ரெட்ரோ ரிலீஸ் தேதியில் சூர்யா 46 | பிஸியான நடிகரான இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் | நான் உழைத்து சம்பாதித்த பணத்தில்தான் படம் தயாரித்தேன்: ஜோவிகா | பவன் கல்யாண் படத்தைத் தடுக்கும் தைரியம் யாருக்கும் இல்லை : சொல்பவர் 'தில்' ராஜு |
தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் வம்சி பைடிபள்ளி. இவர் விஜய் நடிக்க உள்ள 66வது படத்தை இயக்கப் போவதாக கடந்த சில வாரங்களாகவே செய்திகள் வெளிவந்தன. சமீபத்திய பேட்டி ஒன்றில் அது உண்மைதான் என வம்சி பைடிபள்ளி தெரிவித்திருக்கிறார்.
“எனது திரையுலகப் பயணத்தில் இப்படம் மிகப் பெரும் பட்ஜெட் படமாக இருக்கும். கோவிட் ஊரடங்கு தளர்வுகளுக்குப் பிறகு படம் பற்றிய அறிவிப்பு வரும். தில் ராஜு இப்படத்தைத் தயாரிக்கிறார், தளபதி விஜய் நாயகனாக நடிக்கிறார்,” எனத் தெரிவித்துள்ளார்.
வேறொரு கதையாசியர் படத்தின் கதையை எழுதித் தருகிறார். அதன்பின் அதற்கான திரைக்கதை அமைக்கும் பணிகளை நடத்தி வருகிறோம். அதை முடிப்பதற்குக் கொஞ்சம் கால அவகாசம் தேவைப்படுகிறது. அந்த வேலைகள் முடிந்ததும் அறிவிப்பு வெளியாகும் என்றும் சொல்கிறார்.
வம்சி பைடிபள்ளி தெலுங்கில் பிரபாஸ் நடித்த முன்னா, ஜுனியர் என்டிஆர் நடித்த பிருந்தாவனம், ராம் சரண் நடித்த எவடு, கார்த்தி, நாகார்ஜுனா நடித்த ஊபிரி - தமிழில் தோழா, மகேஷ்பாபு நடித்த மகரிஷி ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இவரும் விஜய்யும் இணையும் படம் பான்-இந்தியா படமாக உருவாக உள்ளது.
விஜய், தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடித்து வருகிறார். அப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்றது. ஊரடங்கு தளர்வுகளுக்குப் பிறகு அப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாகும்.