மகளிர் ஆணையத்தில் மனைவியுடன் நேரில் ஆஜரான மாதம்பட்டி ரங்கராஜ் | படப்பிடிப்புக்கு 5 நாட்களுக்கு முன்புதான் பைசன் படத்தின் ஸ்கிரிப்டை படித்தேன்! - துருவ் விக்ரம் | ‛உஸ்தாத் பகத்சிங்' படத்தில் இணைந்த பார்த்திபன் | பட தயாரிப்பு நிறுவனம் வழக்கு : நடிகர் விஷால் பதிலளிக்க உத்தரவு | 'கோச்சடையான்' பட விவகாரம் : ரஜினி மனைவி லதாவுக்கு சிக்கல் | விஜய்யின் 'ஜனநாயகன்' படத்தின் தமிழ்நாட்டு தியேட்டர் உரிமையை வாங்கிய ரோமியோ பிக்சர்ஸ்! | மோகன்லாலை தொடர்ந்து சிரஞ்சீவிக்கு ஜோடியாகும் மாளவிகா மோகனன்! | காப்புரிமை தொடர்பான 'சோனி' வழக்கு : இளையராஜா பதில் அளிக்க கோர்ட் உத்தரவு | ப்ரீ புக்கிங்கில் முந்தும் 'டியூட்' | 3 ஆண்டு தலைமறைவுக்கு பின் நடிகை மீரா மிதுன் ஆஜர் |
பெங்களூரை சேர்ந்தவர் கவிதா கவுடா. தமிழில் ஒளிபரப்பான மகாபாரதம் தொடரின் மூலம் அறிமுகமான இவர், அதன் பிறகு நீலி, மகராசி உள்பட பல சீரியல்களில் நடித்தார். கன்னடத்தில் ஒளிபரப்பான லட்சுமி பிரம்மா என்ற தொடரின் மூலம் அங்கு பிரபலமான நடிகை ஆனார். ஸ்ரீனிவாசா கல்யாணம், பர்ஸ்ட் லவ் உள்பட பல கன்னட படங்களிலும் நடித்துள்ளார். கன்னட பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
கடைசியாக பாண்டியன் ஸ்டோர் தொடரில் மீனாட்சியாக நடித்தார். கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இந்த சீரியலில் இருந்து விலகினார். தற்போது கன்னடத்தில் குக் வித் கிறுக்கு நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்.
இந்த நிலையில் தன்னுடன் பல சீரியல்களில் இணைந்து நடித்து வந்த சந்தன் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களது திருமண நிச்சயதார்த்தம் கடந்த மாதம் நடந்தது. தற்போது இருவருக்கும் பெங்களூருவில் எளிய முறையில் திருமணம் நடந்துள்ளது. தனது திருமண புகைப்படங்களை கவிதா கவுடா வெளியிட்டுள்ளார். அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.