23வது சென்னை திரைப்பட விழாவில் தமிழ் 12 படங்கள் | ஒரே ஒரு ஹிட்டுக்காக காத்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் | தமிழை விட்டு விலகி செல்கிறாரா சூர்யா? | இசை ஆல்பம் இயக்கிய ஷாம் | நடிகை பலாத்கார வழக்கில் நடிகர் திலீப் விடுதலை : மற்ற 6 பேர் குற்றவாளி என தீர்ப்பு | இயற்கை விவசாயம் செய்யும் மேக்னா | பிளாஷ்பேக்: நட்சத்திர ஓட்டல்களில் படமான 'வேலைக்காரன்' | பிளாஷ்பேக்: சரித்திர படத்தில் சோலோ ஹீரோயினாக நடித்த கண்ணாம்பா | 2026 சினிமா நிலைமை இப்படி இருக்க போகிறது : திருப்பூர் சுப்ரமணியம் சொல்லும் அதிர்ச்சி தகவல் | கோவை தமிழ் பிடிக்கும்னு கிர்த்தி ஷெட்டி சொன்னது ஏன்? |

தேன்மொழி பி.ஏ., சீரியலில் ஜாக்குலினுக்கு அப்பாவாக நடித்த வந்த குட்டி ரமேஷ், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்த நிலையில் மாரடைப்பால் இறந்து விட்டார். அவரது மறைவு சின்னத்திரை உலக அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தேன்மொழி பி.ஏ சீரியல் நாயகியான ஜாக்குலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‛‛அப்பா குட்டி ரமேஷின் இறப்பு மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. நல்ல மனிதராகவும், அப்பாவாகவும் இருந்த நீங்கள் இல்லாதது வருத்தமாக உள்ளது. உங்களை நான் மிஸ் செய்வேன். எனக்கும், அப்பாக்களுக்கும் ராசியே இல்லை என்று மிகுந்த மனவேதனையுடன் செய்தி வெளியிட்டுள்ளார் ஜாக்குலின்.
அதேப்போல் குட்டி ரமேஷின் மற்றொரு மகளாக நடித்துள்ள கம்பம் மீனாவும் இன்ஸ்டாகிராமில் ஒரு செய்தி பதிவிட்டுள்ளார். அதில், அய்யோ கடவுளே என்ன கொடுமை இது. ரமேஷ் சார் எப்பவுமே சுறுசுறுப்பாக கலகலப்பாக இருப்பீங்களே. நீங்க சரியாகி வந்திருவீங்கன்னு முழு நம்பிக்கையோடு இருந்தோமே. மீனாம்மா வாங்க டிக்டாக் பண்ணலாம், பேஸ்புக்குல போடுங்க, இன்ஸ்டால போடுங்கனு சொல்வீங்களே ரமேஷ் சார். எத்தனை லைக் வந்துருக்கு, என்னென்ன கமெண்ட் வந்திருக்குன்னு கேட்பீங்களே சார். உங்க ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் சார் என்று அவருடன் தான் எடுத்துக்கொண்ட புகைப் படத்துடன் தெரிவித்துள்ளார் கம்பம் மீனா.