'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! | தேவி ஸ்ரீ பிரசாதிற்கு ஜோடியாகும் நடிகை யார் தெரியுமா? |
பிரபல சின்னத்திரை நட்சத்திரம் சவுந்தர்யா நந்தகுமார். விஜய் டி.வியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற இவர், பின்னர் திரைப்படங்களிலும் பாடினார். சின்னத்திரை தொடர்களிலும், கபாலி, மாஸ்டர், வணக்கம்டா மாப்பிள்ளை உள்ளிட்ட சில படங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார். இதுதவிர ஏராளமான குறும்படங்களிலும் நடித்திருக்கிறார்.
சவுந்தர்யா சமூக வலைத்தளங்களில் சுறுசுறுப்புடன் இயங்குபவர். இதனால் ஏராளமான ரசிகர்கள் அவரை சமூக வலைத்தளத்தில் பின் தொடருகின்றனர். இந்நிலையில் ஒரு கல்லூரி விரிவுரையாளர் ஒருவர் இவருக்கு ஆபாசமாகவும், கீழ்த்திரமான குறுஞ்செய்திகளை அனுப்பி உள்ளார். அதை அப்படியே ஸ்கிரீன் ஷாட்டாக தனது இன்ஸ்ட்ராகிராமில் வெளியிட்டுள்ள சவுந்தர்யா, சம்பந்தபட்ட கல்லூரி நிர்வாகத்திற்கும் அனுப்பி வைத்துள்ளார். அவரது கணக்கை முடக்குமாறு இன்ஸ்ட்ராகிராமிற்கும் புகார் மனு அனுப்பி உள்ளார். இந்த தகவல்களை சவுந்தர்யா தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அந்த நபரை பிளாக் செய்த ஸ்க்ரீன் ஷாட்டையும் பகிர்ந்து கொண்டுள்ளார். எதிர்காலத்தில் அந்த நபர் உருவாக்கக்கூடிய அனைத்து கணக்குகளையும் பிளாக் செய்து, "இந்த விருப்பத்தை கொண்டு வந்த இன்ஸ்டாகிராமுக்கு நன்றி" என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.