டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பிரபல சின்னத்திரை நட்சத்திரம் சவுந்தர்யா நந்தகுமார். விஜய் டி.வியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற இவர், பின்னர் திரைப்படங்களிலும் பாடினார். சின்னத்திரை தொடர்களிலும், கபாலி, மாஸ்டர், வணக்கம்டா மாப்பிள்ளை உள்ளிட்ட சில படங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார். இதுதவிர ஏராளமான குறும்படங்களிலும் நடித்திருக்கிறார்.
சவுந்தர்யா சமூக வலைத்தளங்களில் சுறுசுறுப்புடன் இயங்குபவர். இதனால் ஏராளமான ரசிகர்கள் அவரை சமூக வலைத்தளத்தில் பின் தொடருகின்றனர். இந்நிலையில் ஒரு கல்லூரி விரிவுரையாளர் ஒருவர் இவருக்கு ஆபாசமாகவும், கீழ்த்திரமான குறுஞ்செய்திகளை அனுப்பி உள்ளார். அதை அப்படியே ஸ்கிரீன் ஷாட்டாக தனது இன்ஸ்ட்ராகிராமில் வெளியிட்டுள்ள சவுந்தர்யா, சம்பந்தபட்ட கல்லூரி நிர்வாகத்திற்கும் அனுப்பி வைத்துள்ளார். அவரது கணக்கை முடக்குமாறு இன்ஸ்ட்ராகிராமிற்கும் புகார் மனு அனுப்பி உள்ளார். இந்த தகவல்களை சவுந்தர்யா தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அந்த நபரை பிளாக் செய்த ஸ்க்ரீன் ஷாட்டையும் பகிர்ந்து கொண்டுள்ளார். எதிர்காலத்தில் அந்த நபர் உருவாக்கக்கூடிய அனைத்து கணக்குகளையும் பிளாக் செய்து, "இந்த விருப்பத்தை கொண்டு வந்த இன்ஸ்டாகிராமுக்கு நன்றி" என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.