Advertisement

சிறப்புச்செய்திகள்

இசை மட்டும் தான்... நடிக்க வர மாட்டேன்: அனிருத் | 'ராய் ராய் ரா ரா'- ராம் சரணின் அதிரடி நடனம் குறித்து சிரஞ்சீவி வியந்து வெளியிட்ட பதிவு! | நடிகர் ஹரிஷ் கல்யாண் - நர்மதா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது! | 44 அரசுப் பள்ளிகளுக்கு விஜய் தேவரகொண்டா உதவி | ரஜினி ஒரு வித்தைக்காரர் : சுராஜ் வெஞ்சரமூடு | மார்ச் 6ல் ஓடிடியில் 'வித் லவ்' | தெலுங்கிலும் ஒரு ‛கில்லர்' : எஸ்ஜே சூர்யா என்ன செய்ய போகிறார் | தனிப்பட்ட வாழ்க்கைக்கு கருத்து கூறுவது அநாகரிகம் : ஆரி | ‛தெறி' ரீமேக்கா ‛உஸ்தாத் பகத்சிங்' : இயக்குனர் பதில் | கலை நிகழ்ச்சி போல நடந்த சங்கீத் வைபவம் : விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா நெகிழ்ச்சி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சவுந்தர்யாவுடன் சேர்ந்து நானும் போயிருக்க வேண்டியது : மீனா பகிர்ந்த புதிய தகவல்

18 செப், 2025 - 12:48 IST
எழுத்தின் அளவு:
I-should-have-gone-with-Soundarya-New-information-shared-by-Meena
Advertisement

தமிழில் ரஜினி, கமல், விஜயகாந்த் என முன்னணி நடிகர்கள் அனைவருடனும் இணைந்து ஜோடியாக நடித்தவர் நடிகை சவுந்தர்யா. தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக வலம் வந்த சமயத்தில் அரசியல் கட்சி ஒன்றின் பிரச்சாரத்தில் கலந்து கொள்வதற்காக தனது சகோதரருடன் தனி விமானத்தில் கிளம்பி சென்றபோது விபத்துக்குள்ளாகி அதிர்ச்சி அளிக்கும் விதமாக மரணமடைந்தார். சவுந்தர்யா அவ்வளவு சிறிய வயதில் இந்த உலகை விட்டு சென்றது அப்போது ரசிகர்களுக்கு மிகப்பெரிய பேரதிர்ச்சியாக இருந்தது.

இந்த நிலையில் நடிகை மீனா சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறும்போது அந்த விமான விபத்தில் நானும் பயணித்திருக்க வேண்டியது என்று புதிய அதிர்ச்சி தகவல் ஒன்றைக் கூறியுள்ளார்.

மீனாவும், சவுந்தர்யாவும் ஒரே சமயத்தில் முன்னணி நடிகைகளாக நடித்து வந்த நேரத்தில் போட்டி நடிகைகளாக இருந்தாலும் அவர்களுக்குள் மிகப்பெரிய நட்பு இருந்தது. இதுபற்றி மீனா கூறும்போது, “எங்களுக்குள் எப்போதுமே ஆரோக்கியமான போட்டி இருக்கும். சவுந்தர்யா ரொம்பவே திறமையான மற்றும் ஒரு அற்புதமான பெண். அது மட்டுமல்ல என்னுடைய நெருங்கிய தோழியும் கூட. அவரது திடீர் மரணம் கேட்டது என்னை மிகப்பெரிய அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. இப்போது வரை கூட எனக்கு அந்த அதிர்ச்சி விலகாமல் தான் இருக்கிறது.

அவர் அந்தப் பிரச்சாரத்திற்காக பயணித்த அதே விமானத்தில் அன்றைய தினம் நானும் அவருடன் பயணித்து இருக்க வேண்டிய சூழல் அப்போது ஏற்பட்டது. என்னையும் அந்த பிரச்சாரத்திற்கு வரச் சொல்லி அழைத்திருந்தார்கள். ஆனால் நான் அரசியலில் இருந்து விலகி இருக்கவே விரும்பியதால் எனக்கு அப்போது படப்பிடிப்பு இருப்பதாக கூறி அந்த பயணத்தை தவிர்த்தேன். ஆனால் அந்த பயணம் இப்படி ஒரு அதிர்ச்சியை தரும் என்று நான் கனவிலும் எதிர்பார்க்கவில்லை” என்று கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நான் சிறுவனாக இருந்தபோது எங்களுக்கு முதல்வராக இருந்தவர் மோடி : உன்னி முகுந்தன் பெருமிதம்நான் சிறுவனாக இருந்தபோது எங்களுக்கு ... பிளாஷ்பேக்: பண்டரிபாயை தெரியும், மைனாவதியை தெரியுமா? பிளாஷ்பேக்: பண்டரிபாயை தெரியும், ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap