ரஜினி பிறந்தநாளில் “படையப்பா” ரிட்டர்ன்ஸ் | இண்டிகோ விவகாரத்தில் விமான ஊழியர்களை திட்டாதீர்கள் : சோனு சூட் ஆதரவு குரல் | பிரித்விராஜூக்கு தாத்தாவாக நடிக்கும் மோகன்லால் | ஜப்பானில் ரசிகர்களுடன் பாகுபலி தி எபிக் படத்தை பார்த்து ரசித்த பிரபாஸ் | வருட இறுதியில் நிவின்பாலிக்கு டபுள் ஜாக்பாட் | பார்த்தால் பசிதீரும், ஒரு அடார் லவ், சிவாஜி : ஞாயிறு திரைப்படங்கள் | 2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் |

ராட்சசன், ஜில்லா, கதை சொல்லப் போறோம், ஜீவா உள்ளிட்ட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் ரவீனா தாஹா. இப்போது ஒளிபரப்பாகி வரும் மௌனராகம் தொடரின் இரண்டாவது சீசனில் நாயகியாக நடிக்கிறார். சின்னத்திரையில் நாயகியாக நடித்தாலும் சினிமாவில் நாயகியாக நடித்து சாதிக்க வேண்டும் என்பதே தன் லட்சியம் என்கிறார் ரவீனா.
அவர் மேலும் கூறியிருப்பதாவது: நடிப்பு தான் என் உயிர், அதுதான் என் வாழ்க்கை என்று முடிவு செய்திருந்தேன். என் அம்மாவும் அதையே விரும்பினார். அதனால் மூன்று வயதில் இருந்து நடனம் கற்க ஆரம்பித்து 4 வயதில் மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் மேடையில் ஆடி, பின்னர் விளம்பர படங்களில் நடித்து, சின்னதிரைக்கு வந்தேன். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சின்னத்திரையில் இப்போது நாயகியாக நடிப்பது சந்தோஷமாக இருக்கிறது.
என்றாலும் சினிமாவில் ஒரு ரவுண்ட் வரவேண்டும், சினிமாவிலும் நாயகியாக சாதிக்க வேண்டும், ஆங்கில இலக்கியம் படிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. சின்னத்திரை தொடர்கள் நீண்ட காலம் ஒளிபரப்பாவதால் மக்கள் மனதில் எளிதில் இடம்பிடித்து விடலாம். என்றாலும் சினிமாவில் நடித்தால்தான் ஒரு முழுமையான நடிகையாக முடியும். அதற்கான தகுதியை நான் இன்னும் வளர்த்துக் கொள்வேன். என்கிறார் ரவீனா.