உடல் தோற்றம் பற்றிய கமென்ட்டால் அழுது இருக்கேன் - கீர்த்தி பாண்டியன் | அனுராக் காஷ்யப் இயக்கத்தில் நடிக்கும் ஜி.வி.பிரகாஷ் | பைட்டர் டீசரில் பிகினி, லிப்லாக்கில் தீபிகா படுகோனே | பைட் கிளப் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது | முத்து ரீ-ரிலீஸ் முதல் காட்சியை பார்த்து ரசித்த மீனா | டொவினோ தாமஸ் பட இயக்குனரிடம் மன்னிப்பு கேட்ட மம்முட்டி பட இயக்குனர் | விவாகரத்து செய்த மனைவிகள் பற்றி ஒருபோதும் தவறாக பேசியது இல்லை ; நடிகர் முகேஷ் | நள்ளிரவு 12.30 மணிக்கே சலார் முதல் காட்சியை துவங்கும் கேரளா திரையரங்குகள் | 'லியோ' படத்திற்குப் பிறகு தவிக்கும் தியேட்டர்காரர்கள் | அமிதாப் குடும்பத்தின் அடுத்த வாரிசு… |
கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக தமிழ்நாட்டில் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் தளர்வில்லாத ஊரடங்கு அடுத்த ஒரு வாரத்திற்கு கடைபிடிக்கப்பட உள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்பே சினிமா மற்றும் டிவி தொடர்கள், நிகழ்ச்சிகள் ஆகியவற்றின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. அதற்கு முன்பு வரை நடைபெற்ற சில படப்பிடிப்புகளின் காரணமாக கொரோனா தொற்றால் பலர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் சிலர் மரணம் அடைந்தும் விட்டனர்.
சென்னையில் உள்ள தனியார் ஸ்டுடியோவில் ஊரடங்கை மீறி நடைபெற்ற மலையாள 'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் படப்பிடிப்பு அதிரடியாக நிறுத்தப்பட்டு அரங்கிற்கு 'சீல்' வைக்கப்பட்டது.
கடந்த வருடம் கொரோனா பாதிப்பின் போது படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்ட போது டிவி நிகழ்ச்சிகள், தொடர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. சில மாதங்களுக்கு பழைய நிகழ்ச்சிகளையே திரும்பவும் ஒளிபரப்பினார்கள். அதே போன்று இந்த வருடமும் ஆரம்பமாகிவிட்டது.
சில டிவிக்களில் முக்கிய ஷோக்களை மறு ஒளிபரப்பு செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். சில தொடர்களைத் தொகுத்து ஒளிரப்பு செய்து வருகிறார்கள். இன்னும் இரண்டு வார காலத்திற்காவது ஊரடங்கு இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரையில் டிவி நிகழ்ச்சிகளில் 'ரிபீட்'களைத்தான் அதிகம் பார்க்க வேண்டியதிருக்கும்.