ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! | 20 கிலோ வெயிட் குறைத்த புகைப்படங்களை வெளியிட்ட நடிகை குஷ்பு! | சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் நடிக்கும் ராம் சரண் | விஜய் சினிமாவை விட்டு செல்லக் கூடாது : இயக்குனர் மிஷ்கின் வேண்டுகோள் | இருமுடி கட்டி சபரிமலை சென்ற நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் | வீர தீர சூரன் 2 : அடுத்த வாரம் ஓடிடி ரிலீஸ் | ஆங்கிலத்தில் பேசச் சொன்ன தொகுப்பாளர் : தமிழில்தான் பேசுவேன் என்ற அபிராமி | முதல் பட ஹீரோ ஸ்ரீ-க்கு ஆதரவாக லோகேஷ் கனகராஜ் |
தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் பூஜா ஹெக்டே, தற்போது தமிழில் விஜய்யின் புதிய படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் பிரபாஸுடன் 'ராதேஷ்யாம்' படத்திலும் நடித்து வரும் பூஜா சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.
இதையடுத்து தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை எடுத்து வந்தார். தற்போது பரிசோதனை மேற்கொண்டதில் கொரோனா நெகட்டிவ் என்று வந்தபின் அதைப் பற்றி தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
“உங்கள் அனைவரின் அன்புக்கும் நன்றி, நான் நன்றாக குணமடைந்துவிட்டேன். முட்டாள் கொரோனாவை அதன் பின் பக்கத்தில் நன்றாக உதைத்துவிட்டேன், கடைசியாக நெட்டிவ் என பரிசோதனையில் வந்துவிட்டது. ஹே...., உங்கள் அனைவரது விருப்பமும் குணப்படுத்தும் ஆற்றலும் அதன் மேஜிக்கை நிகழ்த்திவிட்டது என நினைக்கிறேன். என்றென்றும் நன்றி, பாதுகாப்பாக இருங்கள்,” என குறிப்பிட்டுள்ளார்.
பூஜா ஹெக்டே கொரோனா பாதிப்பிலிருந்து நலமடைந்ததை அடுத்து அவருக்கு ரசிகர்கள், திரைப் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.