தக் லைப் படம் ரிலீஸை தடுத்தால் வழக்குப்பதிவு: சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை! | குபேரா படத்திற்கு 19 இடங்களில் கட் கொடுத்த சென்சார் போர்டு | விஜய்யை தொடர்ந்து ரஜினியை இயக்குகிறாரா வினோத்? | அஜித் குமாரை நேரில் சந்தித்த யுவன் சங்கர் ராஜா | விக்ரம் பிரபுவின் ‛லவ் மேரேஜ்' டிரைலர் வெளியீடு | 50 கோடியில் காசி செட் : ராஜமவுலி படத்துக்காக தயாராகுது | ‛பஞ்சாயத்து' சீரிஸ் என்னை இந்தியா முழுக்க அறிய வைத்திருக்கிறது - நீனா குப்தா பெருமிதம் | டிஎன்ஏ படத்தை அவங்களுக்கு அர்ப்பணிக்கிறேன் : ஹீரோ அதர்வா முரளி நெகிழ்ச்சி | 'தி ராஜா சாப் 1000 கோடி வசூலிக்கும்' : இயக்குனர் மாருதி நம்பிக்கை | ஐதராபாத் திரைப்பட நகரம் பற்றி கஜோல் பேச்சு : திரையுலகம் அதிர்ச்சி |
சென்னை : தமிழ் சினிமாவில் விவேக், கே.வி.ஆனந்த் என அடுத்தடுத்து திரைப்பிரபலங்கள் மறைந்து வரும் சூழலில் இன்று(மே 6) ஒரேநாளில் மூன்று பேர் மரணித்து இருப்பது திரையுலகினர் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடந்தாண்டு கொரோனா தொற்று ஏற்பட்ட காலத்தில் பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், நடிகரும், இயக்குனருமான விசு உள்ளிட்ட சில பிரபலங்கள் மறைந்தனர். இந்தாண்டும் அதேப்போன்று பல திரைப்பிரபலங்கள் அதிலும் கடந்தாண்டை விட இந்தாண்டு அதிகமாக மறைந்து வருகின்றனர். கடந்த மார்ச் 14ல் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் மறைந்தார். அதன்பின் நகைச்சுவை நடிகரும், பசுமை இந்தியா ஆர்வலருமான நடிகர் விவேக் ஏப்., 17ல் மறைந்தார். இவர்கள் மறைந்த சோகம் தீருவதற்குள் ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான கே.வி.ஆனந்த் ஏப்.,30 அன்று கொரோனா தொற்றோடு, மாரடைப்பால் காலமானார்.
இந்நிலையில் நேற்று 500 படங்களுக்கு மேல் நடித்தவரும், என்னடி முனியம்மா உள்ளிட்ட பாடல்களை பாடிய நாட்டுப்புற பாடகருமான டி.கே.எஸ்.நடராஜன் சென்னையில் வயது மூப்பால் காலமானார். இப்படி அடுத்தடுத்து திரைப்பிரபலங்கள் மறைந்து தமிழ் சினிமா உலகினர் மற்றும் ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்திய நிலையில் இன்று(மே 6) ஒரே நாளில் மூன்று பிரபலங்கள் மறைந்தது திரையுலகினர் இடையே இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு, ‛ஆட்டோகிராப்' பட புகழ் பாடகரும், மாற்றுத்திறனாளியுமான கோமகன் ஆகியோர் கொரோனா நோய் தொற்றுக்கு ஆளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி இன்று உயிரிழந்தனர். அதேப்போன்று 1980ல் ஒரு தலை ராகம் எனும் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்து டி.ராஜேந்தர் உள்ளிட்ட பலரை சினிமாவுக்கு தந்த இயக்குனரும், தயாரிப்பாளருமான இப்ராஹிமும் இன்று உடல்நலக்குறைவால் காலமானார்.
இப்படி திரைப்பிரபலங்கள் அடுத்தடுத்து மரணம் அடைந்து வருவது தமிழ் திரையுலகினர் மத்தியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.