அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! |
தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் சமீபத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் நடித்து வெளிவந்த திரைப்படம் 'லப்பர் பந்து'. கிரிக்கெட் மற்றும் குடும்பம், காதல் என மையப்படுத்தி வெளிவந்த இப்படம் விமர்சன ரீதியாக, வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் தமிழரசன் பச்சமுத்துவிற்கு அடுத்த படத்திற்காக பல தயாரிப்பு நிறுவனங்கள் அவரை தேடி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது தனுஷை வைத்து 'இட்லி கடை' படத்தை தயாரித்து வரும் டாவுன் பிக்சர்ஸ் நிறுவனத்தில் அடுத்து படம் இயக்குவதற்காக அவர் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்திற்காக தமிழரசன் பச்சமுத்துவிற்கு ரூ. 1 கோடி சம்பள தொகையாக பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.