தயாரிப்பாளர் தக்காளி சீனிவாசன் காலமானார் | போர் சூழலுக்கு மத்தியில் சென்னை திரும்பினார் நடிகர் அஜித்குமார் | பிரியா பவானி சங்கரை தொடர்ந்து ரவிதேஜா படத்தில் இணைந்த தமன்னா! | இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படத்தில் நடிக்கும் குமரன் | சூப்பர் நேச்சுரல் கிரைம் திரில்லராக உருவாகும் 'மண்டவெட்டி' | தனுசுக்கு ஜோடியாகும் நடிக்கும் ருக்மணி வசந்த்! | 'ஆர்யா 40' படத்தில் இரு நாயகிகள் | 'டென்ஷன்' படத்தில் காமெடி கலந்த வில்லனாக ஆர்.கே.வரதராஜ் | 'ஜெயிலர் 2' படத்தில் ஷாருக்கான் கதாபாத்திரம் என்ன தெரியுமா? | அனிமேஷன் படத்தை இயக்குகிறாரா அனில் ரவிபுடி? |

கடந்த 2012ம் ஆண்டில் சுந்தர்.சி இயக்கத்தில் விமல், மிர்ச்சி சிவா, அஞ்சலி, ஓவியா, சந்தானம் ஆகியோர் இணைந்து நடித்து வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் 'கலகலப்பு'. இந்த பாகத்தின் வெற்றிக்குப் பிறகு கடந்த 2018ல் சுந்தர். சி ஜீவா, ஜெய் நடிப்பில் 'கலகலப்பு 2'ம் பாகத்தை இயக்கினார். இப்படத்திற்கு விமர்சனம் முன்ன பின்ன இருந்தாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.
சமீபத்தில் சுந்தர்.சி கலகலப்பு 3ம் பாகத்தை இயக்க தயாராக உள்ளதாக கூறப்பட்டது. ஆனால், ஒரு சில காரணங்களால் சுந்தர். சி தற்போது வடிவேலுவுடன் 'கேங்கர்ஸ்' படத்தினை இயக்கி வருகிறார். இதைத்தொடர்ந்து நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் 2ம் பாகத்தை இயக்கவுள்ளார் சுந்தர் சி. இந்த படங்களை முடித்த பிறகு தான் சுந்தர் சி கலகலப்பு 3ம் பாகத்திற்கான பணிகளை தொடங்கவுள்ளார் .இந்த படத்தில் மீண்டும் விமல் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சமீபத்தில் ஒரு பேட்டியில் விமல் உறுதி செய்தார்.