சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
கடந்த 2012ம் ஆண்டில் சுந்தர்.சி இயக்கத்தில் விமல், மிர்ச்சி சிவா, அஞ்சலி, ஓவியா, சந்தானம் ஆகியோர் இணைந்து நடித்து வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் 'கலகலப்பு'. இந்த பாகத்தின் வெற்றிக்குப் பிறகு கடந்த 2018ல் சுந்தர். சி ஜீவா, ஜெய் நடிப்பில் 'கலகலப்பு 2'ம் பாகத்தை இயக்கினார். இப்படத்திற்கு விமர்சனம் முன்ன பின்ன இருந்தாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.
சமீபத்தில் சுந்தர்.சி கலகலப்பு 3ம் பாகத்தை இயக்க தயாராக உள்ளதாக கூறப்பட்டது. ஆனால், ஒரு சில காரணங்களால் சுந்தர். சி தற்போது வடிவேலுவுடன் 'கேங்கர்ஸ்' படத்தினை இயக்கி வருகிறார். இதைத்தொடர்ந்து நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் 2ம் பாகத்தை இயக்கவுள்ளார் சுந்தர் சி. இந்த படங்களை முடித்த பிறகு தான் சுந்தர் சி கலகலப்பு 3ம் பாகத்திற்கான பணிகளை தொடங்கவுள்ளார் .இந்த படத்தில் மீண்டும் விமல் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சமீபத்தில் ஒரு பேட்டியில் விமல் உறுதி செய்தார்.