தோட்டா தரணிக்கு செவாலியே விருது | மீண்டும் ரஜினியை இயக்குவது போன்று கமலையும் இயக்குவீர்களா? சுந்தர்.சி கொடுத்த பதில் | நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் | ‛இன்று போய் நாளை வா' : கே.பாக்யராஜ் சொன்ன பிளாஷ்பேக் | ராஜமவுலி படத்தில் ஸ்ருதிஹாசன் பாடிய பாடல் வெளியீடு | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ராதிகா ஆப்தே படம் | அனந்தா படத்தில் நடந்த அதிசயங்கள் : சத்யசாய்பாபா மகிமை சொன்ன சுரேஷ் கிருஷ்ணா | டப்பிங் பணிகளை துவங்கிய அபிஷன், அனஸ்வரா | தமிழகத்தில் வெளியாகும் ஆஸ்கர் பரிந்துரை படம் | அன்னை இல்லத்தில் இருந்து அடுத்து வாரிசு: ரஜினி ஆசி |

கடந்த 2012ம் ஆண்டில் சுந்தர்.சி இயக்கத்தில் விமல், மிர்ச்சி சிவா, அஞ்சலி, ஓவியா, சந்தானம் ஆகியோர் இணைந்து நடித்து வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் 'கலகலப்பு'. இந்த பாகத்தின் வெற்றிக்குப் பிறகு கடந்த 2018ல் சுந்தர். சி ஜீவா, ஜெய் நடிப்பில் 'கலகலப்பு 2'ம் பாகத்தை இயக்கினார். இப்படத்திற்கு விமர்சனம் முன்ன பின்ன இருந்தாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.
சமீபத்தில் சுந்தர்.சி கலகலப்பு 3ம் பாகத்தை இயக்க தயாராக உள்ளதாக கூறப்பட்டது. ஆனால், ஒரு சில காரணங்களால் சுந்தர். சி தற்போது வடிவேலுவுடன் 'கேங்கர்ஸ்' படத்தினை இயக்கி வருகிறார். இதைத்தொடர்ந்து நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் 2ம் பாகத்தை இயக்கவுள்ளார் சுந்தர் சி. இந்த படங்களை முடித்த பிறகு தான் சுந்தர் சி கலகலப்பு 3ம் பாகத்திற்கான பணிகளை தொடங்கவுள்ளார் .இந்த படத்தில் மீண்டும் விமல் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சமீபத்தில் ஒரு பேட்டியில் விமல் உறுதி செய்தார்.




