நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

மலையாளத்தில் ‛ககனச்சாரி, பொன்மேன்' உள்ளிட்ட பல படங்களை தயாரித்த அஜித் விநாயகாக பிலிம்ஸ் தயாரிக்கும் முதல் தமிழ் படத்தின் படப்பிடிப்பு டைட்டில் வைக்கப்படாமலேயே 45 நாட்களில் ஒரே மூச்சாக படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
விமல் நாயகனாகவும், முல்லை அரசி நாயகியாகவும் நடிக்கும் இந்த படத்தை இரட்டையர்கள் எல்சன் எல்தோஸ் மற்றும் மனிஷ் கே தோப்பில் இயக்கி உள்ளனர், கிராமப்புற பின்னணியில், பேமிலி காமெடி எண்டர்டெயினராக படம் உருவாகி உள்ளது.
சேத்தன், பருத்திவீரன் சரவணன் உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர். எழுத்தாளர் பாசில் ஜார்ஜ் மற்றும் ஆகாஷ் வி பால் ஆகியோர் இப்படத்தின் கதையை எழுதியுள்ளார்கள். திரைக்கதையை சுதி கிருஷ்ணா அமைத்துள்ளார். 'பார்க்கிங்' பட ஒளிப்பதிவாளர் ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.