'பெத்தி' படத்திலிருந்து ஜான்வி கபூர் முதல் பார்வை வெளியானது! | ‛மேயாத மான்' ரத்னகுமார் படத்தை தயாரிக்கும் இயக்குனர்கள்! | வாரிசு பட இயக்குனரின் அடுத்த படத்தில் நடந்த ட்விஸ்ட்! | கமல் பிறந்தநாளில் ரஜினி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்! | டப்பிங்கில் இவ்வளவு விஷயங்களா? விளக்குகிறார் ஷ்யாம் குமார் | பீதியில் புரோட்டா காமெடியன் | 'டீசலுக்கு' வரவேற்பு உண்டு வருவாய் இல்லை: இயக்குனர் சண்முகம் | பிளாஷ்பேக்: திரைப் பிரபலங்களின் மாற்றத்திற்கு காரணியாய் இருந்த “ஸ்ரீமுருகன்” | ரசிகர் கொலை வழக்கில் நவ-6ல் நடிகர் தர்ஷன் உள்ளிட்ட அனைவரிடமும் வீடியோ கான்பரன்ஸ் விசாரணை | கேரள மாநில திரைப்பட அகாடமி தலைவராக ரசூல் பூக்குட்டி தேர்வு |

ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சுவாசிகா நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் லப்பர் பந்து. இந்த படத்தை தமிழரசன் பச்சமுத்து இயக்கி இருந்தார். சினிமா துறையினர் மட்டுமின்றி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பினையும் பெற்று இந்த படம் வசூல் சாதனை செய்துள்ள நிலையில், அடுத்தபடியாக தனுஷை சந்தித்து ஒரு கதை சொல்லி இருக்கிறார் தமிழரசன் பச்சமுத்து. அந்த கதையில் நடிப்பதற்கு தனுஷ் சம்மதம் தெரிவித்துவிட்டபோதும், தற்போது இட்லி கடை படத்தை இயக்கி நடித்து வரும் அவர், குபேரா மற்றும் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படங்களில் அடுத்தடுத்து நடிப்பதால் உடனடியாக கால்ஷீட் தர இயலாது என்று தெரிவித்துவிட்டாராம். அதன் காரணமாகவே தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் பைசன் படத்தில் நடித்து வரும் துருவ் விக்ரமை சந்தித்து இன்னொரு கதை சொல்லி இருக்கிறார் தமிழரசன் பச்சமுத்து. பைசன் படத்தை முடித்த பிறகு துருவ்வை வைத்து தனது அடுத்த படத்தை இவர் இயக்குவார் என்று கூறப்படுகிறது.